News October 21, 2025

பாகிஸ்தானில் காற்று மாசுபாடு ஏற்பட்டதற்கு இந்தியா காரணம்

image

இந்தியாவின் தீபாவளி கொண்டாட்டம், பாகிஸ்தானுக்கு தலைவலியாக மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். வட இந்திய மாநிலங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தீவிர காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டெல்லிக்கு அடுத்தபடியாக உலகின் அதிக மாசுபாடான நகரங்களில் பஞ்சாப்பின் லாகூர் 2-ம் இடம்பிடித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

Similar News

News January 20, 2026

தருமபுரியில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

image

சோகத்தூர், அதகப்பாடி மற்றும் வெள்ளிசந்தை துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து குமாரசாமிபேட்டை, சோகத்துார், ரெட்டிஹள்ளி, ஏ.ஆர்.கோட்ரஸ், பிடமனேரி, பங்குநத்தம், அதகபாடி, சோம்பட்டி, இண்டூர், பாலக்கோடு, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, வெள்ளிசந்தை சுற்றுபுற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2026

குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவித்தது

image

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் ₹3,000 ரொக்கம் அடங்கிய இத்தொகுப்பு விடுபட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

News January 20, 2026

கூட்டணி ஆட்சி கிடையாது: தம்பிதுரை திட்டவட்டம்

image

தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி கிடையாது என்று கூறியுள்ள அதிமுக MP தம்பிதுரை, 2026-லும் கூட்டணி ஆட்சி இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஓசூரில் பேசிய அவர், EPS தலைமையில் அதிமுக தனித்து தான் ஆட்சியை அமைக்கும் என்று கூறியுள்ளார். தேர்தலில் மட்டும் தான் கூட்டணி; ஆட்சியில் கூட்டணி கிடையாது என்று கூறிய அவர், கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!