News March 27, 2025
இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது: அமித்ஷா

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025, இன்று லோக்சபாவில் நிறைவேறியது. முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமித்ஷா, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வருபவர்களை திறந்த மனதுடன் எப்போதும் வரவேற்போம் எனவும், ஆனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை நாட்டிற்குள் அனுமதிக்கமாட்டோம் என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல எனவும் கூறினார்.
Similar News
News November 5, 2025
9-ம் தேதி கடைசி: அரசு மெடிக்கல் கல்லூரி அட்மிஷன்

2025-2026 கல்வியாண்டிற்கான M.D. (Yoga & Naturopathy) PG-க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ₹3,000. SC/ ST பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை. வரும் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நாளை முதல் <
News November 5, 2025
SIR கணக்கெடுப்பில் குளறுபடி: திமுக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் வாக்காளர் SIR பணி தொடங்கிய நிலையில், பெரும்பாலான இடங்களில் கணக்கீடு படிவங்கள் தரப்படவில்லை என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார். ஓரிரு தொகுதிகளில் படிவங்களை கொடுத்துவிட்டு, மறுநாளே பூர்த்தி செய்துதர கேட்பதாகவும், 2002-க்கு பிறகு வெளியிடப்பட்ட அனைத்து வாக்காளர்கள் பட்டியலும் செல்லுபடி தன்மை அற்றதாக ஆகிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 5, 2025
இன்சூரன்ஸ் பணத்துக்காக போலி டெத் டிராமா!

₹25 லட்சம் பணத்துக்காக கணவன் இறந்துவிட்டதாக நாடகமாடிய இளம்பெண் மற்றும் அவரது கணவன் போலீசில் சிக்கியுள்ளனர். லக்னோவை சேர்ந்த ரவி சங்கர், 2023 ஏப்.9 அன்று இறந்துவிட்டதாகக் கூறி, ஏப்.21 அன்று இன்சூரன்ஸ் கம்பெனியில் மனைவி கேஷ் குமாரி டாக்குமெண்ட் சமர்ப்பித்துள்ளார். பின்னர், கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தில் தம்பதி ஜாலியாக இருப்பதை அறிந்த போலீசார் இருவரையும் கொத்தாக தூக்கி சிறையில் அடைத்துள்ளனர்.


