News August 3, 2024

உணவு உபரி நாடானது இந்தியா: பிரதமர் மோடி

image

உணவு உபரி நாடாக இந்தியா மாறியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாய நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், நாட்டின் பொருளாதார கொள்கைகளின் மையமாக விவசாயம் இருக்கிறது என்றார். மேலும் பால், பருப்பு வகைகள், மசாலா பொருள்கள் உற்பத்தியில் உலகளவில் முதல் நாடாகவும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், சர்க்கரை உற்பத்தியில் 2வது நாடாகவும் இந்திய திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 26, 2025

நெல்லை: மூதாட்டியிடம் 5 பவுன் தாலிச்செயின் பறிப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் ஆவுடையாள்புரம் கிராமத்தில், தனியாக வசித்து வந்த மூதாட்டி, நேற்று (நவ.25) மாலை வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் வீட்டுக்குள் நுழைந்து, அவர் கழுத்தில் கிடந்த, 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு, தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, கூடன்குளம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தி, வருகின்றனர்.

News November 26, 2025

சற்றுமுன்.. விலை மொத்தம் ₹5,000 உயர்ந்தது

image

வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளது. நேற்று(நவ.25) கிலோவுக்கு ₹3,000, இன்று ₹2,000 என மொத்தம் ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால், 1 கிராம் ₹176-க்கும், கிலோ ₹1,76,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கடந்த 2 நாள்களில் மட்டும் 3% உயர்ந்து 1 அவுன்ஸ் 52.75 டாலருக்கு விற்பனையாகிறது. இதனால், வரும் நாள்களில் இந்தியாவில் வெள்ளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

News November 26, 2025

லாபத்துக்காக கட்சி ஆரம்பித்த விஜய்: தமிழருவி மணியன்

image

மக்களுக்கான ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவிக்காமல், வீடு, வாகனம் என ஒப்பேறாத திட்டங்களை விஜய் விளம்பரப்படுத்துவதாக தமிழருவி மணியன் விமர்சித்துள்ளார். விஜய் தன்னலமற்ற மக்கள் சேவைக்காக கட்சி ஆரம்பித்தவர் அல்ல எனவும், தனலாபம் ஈட்ட கட்சியை ஆரம்பித்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ்வை அருகில் வைத்து கட்சி நடத்துவதே இதற்கு சாட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!