News September 20, 2025

இந்தியாவுக்கு பெரிய எதிரிகளே இல்லை: PM மோடி

image

உலகில் இந்தியாவுக்கென பெரிய எதிரிகள் யாரும் இல்லை என குஜராத்தில் PM மோடி கூறியுள்ளார். மற்ற நாடுகளை சார்ந்து இருப்பது தான் நமது நாட்டின் பலவீனம் என தெரிவித்த அவர், மற்ற நாடுகளுக்கு முன் இது நமது சுயமரியாதையை சீர்குலைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து பொருள்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Similar News

News September 20, 2025

தமிழில் 100/100 வாங்கினால் ₹10,000 பரிசு

image

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழில் 100-க்கு 100 வாங்கினால் ₹10,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வித்துறை முப்பெரும் விழாவில் முதற்கட்டமாக 142 மாணவர்களுக்கு CM, தலா ₹10,000 காசோலையை வழங்கி பாராட்டினார். நல்லா படிச்சு ₹10,000 வாங்குங்க மாணவர்களே..

News September 20, 2025

மர்மம் நிறைந்த இடங்கள் PHOTOS

image

இந்தியா வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்ல, பல மர்மங்களும் நிறைந்த நாடாகும். சில இடங்கள், அறிவியலை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற மர்மம் நிறைந்த சில இடங்களை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று மர்மம் நிறைந்த வேறு ஏதேனும் இடம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 20, 2025

பழவேற்காடு சரணாலயத்தில் மதுக்கடை: அன்புமணி சாடல்

image

மது வணிகத்தை மட்டுமே முதன்மை நோக்கமாக கொண்டு திமுக அரசு செயல்படுவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் டாஸ்மாக் நிறுவனம் விதிகளை மீறி மதுக்கடை நடத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழலை அழிக்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் பறவைகள் சரணாலயத்தில், மதுக்கடைகளை அனுமதிப்பது சட்டவிரோதம் எனவும் அன்புமணி சாடியுள்ளார்.

error: Content is protected !!