News September 2, 2025
ஆப்கனுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், 15 டன் உணவுப் பொருள்கள், 1,000 டெண்ட்டுகளை இந்தியா நிவாரண உதவியாக ஆப்கனுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் தேவையான உதவிகள் அளிக்க தயார் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 2, 2025
அஜித் சொன்ன விஷயம்; நின்றுபோன மங்காத்தா-2?

நடிகர் அஜித் கரியரின் டாப் மாஸ் படங்களில் மங்காத்தாவுக்கு சிறப்பான இடம் உண்டு. இப்படத்துக்கான ஃபீவர் ரசிகர்கள் மத்தியில் இருப்பதால், தயாரிப்பாளர் ஒருவர் மங்காத்தா 2-வுக்கான கதையை எழுத சொல்லி வெங்கட்பிரபுவை அணுகியிருக்கிறார். அவரும் குஷியில் வேலையை தொடங்க, இடையில் அஜித் ₹200 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், மங்காத்தா-2 என்ற பேச்சுக்கே இடமில்லை என தயாரிப்பாளர் விலகிவிட்டாராம்.
News September 2, 2025
SM விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமுடன் பும்ராவை ஒப்பிட்டு பல சண்டைகள் சோஷியல் மீடியாவில்(SM) அவ்வப்போது நடைபெறும். ஆனால் இருவரும் வேறு வேறு காலகட்டத்தில் விளையாடியதால், ஒப்பிடுவது சரியாக இருக்காது என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் வித்தியாசமானது என கூறிய அவர், மார்டன் இராவின் சிறந்த பௌலர் பும்ராதான் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News September 2, 2025
இளமையான தோற்றத்தை தரும் ‘புதினா தேநீர்’

புதினா தேநீர் அருந்துவது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். புதினா இலைகளை வெயிலில் உலர்த்தி, அவற்றை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இதை தேனுடன் கலந்து அருந்தினால், சரும பாதிப்புகளை வெகுவாக குறையும். புதினாவின் மணமும் சுவையும், இதனை அருந்தும்போது நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். முகச் சுருக்கங்கள் நீங்கி, இளமையான தோற்றம் கிடைக்கும். SHARE IT.