News September 14, 2024
ஹங்கேரியில் இந்தியா ஆதிக்கம்!

ஹங்கேரியில் நடைபெறும் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. மொத்தம் 11 சுற்றுகளாக போட்டி நடத்தப்படும் நிலையில், இன்று 3ஆவது சுற்று நடைபெற்றது. ஹங்கேரி B அணியை ஆடவர் அணியும், சுவிட்சர்லாந்தை மகளிர் அணியும் எதிர்கொண்டன. இதில், ஆடவர் அணி 3.5-0.5, மகளிர் அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிப் பட்டியலில் ஆடவர் அணி முதலிடத்தில் உள்ளது.
Similar News
News November 4, 2025
ABD-யிடம் அட்வைஸ் கேட்கும் இந்திய கேப்டன் SKY!

T20 & ODI பார்மெட்களை எப்படி பேலன்ஸ் செய்வது என AB டிவில்லியர்ஸிடம் அறிவுரை கேட்டுள்ளார் இந்திய T20 கேப்டன் சூர்யகுமார் யாதவ். T20-ல் நன்றாக விளையாடினாலும், ODI-ல் தான் தடுமாறுவதாக குறிப்பிட்ட அவர், இப்பேட்டியை பார்த்தால் AB டிவில்லியர்ஸ் தன்னை உடனடியாக அணுகி அட்வைஸ் தர வேண்டும் என கூறினார். மேலும், இரு பார்மெட்டுக்கு மத்தியில் தன்னால், சமநிலையை பெறமுடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
News November 4, 2025
கிட்னி திருட்டு வழக்கில் Point-களை விட்ட அரசு: EPS

கிட்னி திருட்டு வழக்கில் திருச்சி தனியார் சிதார் ஹாஸ்பிடலின் லைசன்ஸை அரசு ரத்து செய்திருந்தது. ஆனால், அந்த உத்தரவை இன்று ஐகோர்ட் மதுரைக் கிளை ரத்து செய்தது. இதை கண்டித்துள்ள EPS, அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சிக்காரரின் ஹாஸ்பிடலை தப்பிக்க வைக்க, மக்கள் நலனை ‘Failure மாடல் ஸ்டாலின் அரசு’ புறந்தள்ளியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 4, 2025
கர்ப்பத்திற்கு நான்தான் காரணம்: மாதம்பட்டி சிக்கினார்

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில் நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் வசமாக சிக்கியுள்ளார். ஜாய் கிரிசில்டாவை 2-வது திருமணம் செய்ததாக, மகளிர் ஆணையத்தில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான்தான் அப்பா என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, DNA பரிசோதனை தேவையில்லை என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.


