News April 13, 2024
இந்தியாவுக்கு மோடி தேவையில்லை

இந்தியாவுக்கு இனிமேல் மோடி வேண்டாம் என கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். தருமபுரி திமுக வேட்பாளரை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் தருகின்ற வரியை மத்திய அரசு முழுமையாக திருப்பித் தருவதில்லை. ஒரு ரூபாயில் 29 பைசாவை மட்டுமே அவர்கள் திருப்பித் தரும் போதும் தமிழக முதல்வர் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், பாஜகவை வீழ்த்துவதே நமது இலக்கு என்றும் கூறினார்.
Similar News
News August 16, 2025
ஜெலன்ஸ்கி – புடின் சந்திப்பு விரைவில் நடக்கும்: டிரம்ப்

புடின் உடனான பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் அமைதி நிலவும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், NATO பொது செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அனைத்தும் நன்றாக நடக்கும் பட்சத்தில் ஜெலன்ஸ்கி விரைவில் புடினை சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
துணை ஜனாதிபதி: உத்தேச பட்டியலில் அண்ணாமலை?

துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கு வரும் 19-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், வேட்பாளருக்கான உத்தேச பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், JP நட்டா, ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், டெல்லி கவர்னர் சக்சேனா, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத், Ex CM கர்பூரி தாக்கூரின் மகன் ராம் நாத் தாக்கூர் ஆகியோர் பெரும் பட்டியலில் உள்ளதாம்.
News August 16, 2025
உத்தமர் என்றால் ஏன் பூட்டு போட்டீர்கள்? EPS தாக்கு

தலைமை செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டதை EPS விமர்சித்துள்ளார். உத்தமர் என கூறிக்கொள்ளும் நீங்கள், அறையை திறந்துவிடுங்கள் எனவும், எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் அறையை பூட்டு போட்டு பூட்டி வைக்கிறீர்கள் என்றும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இன்று ED ரெய்டு நடத்தியது.