News March 28, 2024
அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் வழக்கு நியாயமாக நடைபெறும். இந்தியாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும். இந்திய நீதித்துறையின் செயல்பாடுகளில் அமெரிக்க சந்தேகம் கற்பிப்பது தேவையற்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
கரூர் அருகே பெண் விபரீத முடிவு!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா ஆண்டிப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (50). இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மனவிரக்த்தியில் சாணப்பவுடரை சாப்பிட்டுள்ளார். பின் அவரை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை!
News September 18, 2025
வாக்கு திருட்டுக்கு ECI உடந்தை: ராகுல் காந்தி

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்கள் பெயரை நீக்கும்படி சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே சிலர் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.
News September 18, 2025
விஜய்யின் கொள்கை என்ன? H.ராஜா

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்ற அரசியல் நிலைப்பாட்டை கொண்டு விஜய் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பா.ஜ.கவை கொள்கை எதிரி என்று விமர்சிக்கும் விஜய்யின் கொள்கை என்ன என H.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை தனது கொள்கைகளை பற்றி விஜய் பேசவில்லை என சாடிய அவர், தேசிய கட்சியான பாஜகவை எதிர்க்கும் தவெக தேச விரோத கட்சியா என்றும் கேட்டுள்ளார்.