News October 27, 2025
இந்தியா – சீனா நேரடி விமான சேவை துவங்கியது

கொரோனா தொற்றின்போது இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நேரடி விமான சேவை துவங்கியுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சீனாவுக்கு 175 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. நவ.10-ல் டெல்லியில் இருந்தும் சீனாவுக்கு நேரடி விமான சேவை துவங்கவுள்ளது. இது இரு நாடுகளிடையே வர்த்தகம், சுற்றுலா உள்பட இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்தும்.
Similar News
News October 27, 2025
சீனாவில் நிலநடுக்கம்: 5.5 ரிக்டர் அளவில் அதிர்வு

வடகொரிய எல்லையை ஒட்டியுள்ள சீனாவின் ஜிலின் மாகாணத்தில், 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஹுன்சுன் நகரில் உள்ள பல கட்டடங்களும் குலுங்கின. நிலநடுக்கத்தின் மையப்பகுதி பூமியின் அடியில் சுமார் 560 கிமீ ஆழத்தில் இருந்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மிதமான நிலநடுக்கம் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேதம் குறித்த தகவல் வெளியாகிவில்லை.
News October 27, 2025
பெண்களே உஷார்! இந்த நோய் உயிரை பறிக்கும்

40 வயதான பெண்களுக்கு brain aneurysm நோய் வருவதற்கான அபாயம் அதிகம் இருக்கிறதாம். மூளையிலுள்ள ரத்த நாளங்கள் வீங்கி, வெடிப்பதைதான் brain aneurysm என்கின்றனர். அப்படி நடந்தால் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிர் பறிபோகலாம். இதற்கு Stress-ம் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, அடிக்கடி கழுத்து வலி, கடுமையான தலைவலி, திடீரென பார்வை மங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் டாக்டரை அணுகுங்கள். SHARE.
News October 27, 2025
விஜய்யின் அரசியல் போக்கு சரியா?

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல், மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் இன்று சந்திக்க இருக்கிறார். இதுகுறித்து TVK அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஊடகங்களுக்கு கூட அழைப்பு விடுக்காமல் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறது. ஒருபுறம் அரசியல் நெருக்கடிகள் இருந்தாலும், அதற்கு தீனிபோடும் வகையிலேயே விஜய்யும் செயல்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?


