News October 3, 2025

IND கிரிக்கெட் அணியின் செயல் மூன்றாம் தரம்: பசித் அலி

image

இந்திய கிரிக்கெட் அணி No 1 ஆக உள்ளது, ஆனால் அவர்களது செயல் மூன்றாம் தரமாக உள்ளதாக முன்னாள் பாக்., வீரர் பசித் அலி கூறியுள்ளார். ஆசிய கோப்பை டிராபியை நக்வியிடம் இருந்து இந்தியா வாங்க மறுத்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர், ஒருவேளை ஆசியக் கோப்பை தொடரை ICC நடத்தி, அதில் பாக்., வென்ற பின்னர் ஜெய் ஷா கைகளால் வாங்க மாட்டோம் என்று சொன்னாலும் அது தவறானது என்றார்.

Similar News

News October 3, 2025

SNAPCHAT யூஸ் பண்ண இனி காசு கட்டணும்!

image

இளைஞர்கள் தினமும் பயன்படுத்தும் SNAPCHAT செயலியில் போட்டோ/வீடியோக்களை Store செய்ய மாதம் ₹300 வரை கட்டணம் செலுத்தவேண்டும். உங்கள் கணக்கிலுள்ள Memories 5GB-ஐ கடந்தால் கட்டணம் வசூலிக்கப்படுமாம். விருப்பமில்லாதவர்கள் 12 மாதங்களுக்கும் தங்களுடைய Memories-ல் உள்ளவற்றை பதிவிறக்கம் செய்யவில்லை என்றால் அவை நீக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறனர்.

News October 3, 2025

கரூர் மீது பாஜகவுக்கு என்ன அக்கறை: CM ஸ்டாலின்

image

கலவரத்துக்குப் பிறகு மணிப்பூருக்கு செல்லாத பாஜக அமைச்சர் கரூருக்கு மட்டும் உடனடியாக வந்தது ஏன் என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். BJP MP-க்கள் தமிழ்நாட்டின் மீது உள்ள அக்கறையில் கரூருக்கு வரவில்லை என்றும் எதையாவது வைத்து தேர்தல் நேரத்தில் அரசியல் செய்ய முடியுமா என்ற நோக்கத்துடனே வந்ததாகவும் விமர்சித்துள்ளார். மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணியாக BJP இருப்பதாகவும் CM சாடினார்.

News October 3, 2025

கணவரை மீட்க SCக்கு சென்ற சோனம் வாங்சுக் மனைவி

image

லடாக் கலவரம் தொடர்பாக கைதான சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை, விடுவிக்க கோரி அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மோதல் தொடர்பாக யாரையாவது பலிகடாவாக்க வேண்டும் என்பதற்காக போலீசார் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சோனம் வாங்சுக்கை விடுவிக்க கோரி <<17890675>>ஜனாதிபதி<<>>, PM-க்கு அவர் ஏற்கெனவே கடிதம் எழுதிருந்தார்.

error: Content is protected !!