News March 19, 2024
மீன் சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் மீன் சாப்பிடுவோர் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2005-06 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களை ஆராய்ந்ததில், மீன் சாப்பிடுவோர் எண்ணிக்கை 66%ல் இருந்து 72.1%ஆக அதிகரித்தது தெரியவந்துள்ளது. மேலும் ஒரு ஆண்டுக்கு தனிநபர் சராசரியாக சாப்பிடும் மீனின் அளவு 12.3 கிலோவாக உயர்ந்திருக்கிறது.
Similar News
News January 19, 2026
EPSக்கு அன்று ஏமாற்று வித்தை.. இன்று: மனோ தங்கராஜ்

அதிமுக தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என EPS கூறியுள்ளார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய மனோ தங்கராஜ், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவோம் என்று கூறியதற்கு, அதனை ஏமாற்று வித்தை என்று கூறிவிட்டு, நீங்கள் எதற்காக அறிவித்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
News January 19, 2026
தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார்

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அன்று பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
News January 19, 2026
அரசியலை விட்டு விலக முடிவா? ரோஜா விளக்கம்

பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா அரசியலில் இருந்து விலகுவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு பதிலளித்துள்ள அவர், தான் தற்போது சினிமா, டி.வி. நிகழ்ச்சிகளில் அதிகமாக வருவதால், அரசியலை விட்டு விலகி விடுவேன் என்று நினைக்கிறார்கள். நான் ஒருபோதும் பயந்து ஓடவோ, விலகவோ மாட்டேன். நான் ஒரு பெண் என்பதால் விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறினார்.


