News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 11, 2025
Delhi Blast: சகோதரியிடம் 3 நாள் முன்பு பேசிய உமர்

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் டாக்டர் உமர் முகமதுவின் பெயர் இருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தோம் என்று அவரது சகோதரி முசாமிலா கூறியுள்ளார். ஃபரீதாபாத்தில் வசித்து வந்த உமருடன் 3 நாள்களுக்கு முன் பேசினேன். அவர் அப்படிப்பட்ட நபர் அல்ல; அவருக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என கூறிய முசாமிலா, அடிலை (மற்றொரு சந்தேக நபர்) எங்களுக்குத் தெரியாது; பெயரை மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
நவ.14 அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா!

TN-ல் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவ.14-ம் தேதி குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Ex PM ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவ.14-ஐ மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 11, 2025
ஷ்ரேயஸ் ஐயருக்கு பதில் யார்?

SA அணிக்கு இந்தியாவில் 5 T20, 3 ODI, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ODI தொடர் வரும் நவ. 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார் என கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தற்போது அவருக்கு பதில், 4-வது விக்கெட்டாக யார் சரியான சாய்ஸாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திலக் வர்மாவை Replacement-ஆக களமிறக்கலாம் என கருத்துக்கள் எழுந்துள்ளது. யாரு கரெக்ட் சாய்ஸ்?


