News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News December 15, 2025
விஜய்யுடன் கூட்டணி வைக்கிறாரா அன்புமணி?

தவெக உடன் முதல் கட்சியாக பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தவெக தலைவர்களை பாமக பாலு சந்தித்தபோது, கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாம். அப்போது, தவெக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அதிகாரத்தில் பங்கு தரப்படும் என பாமகவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாம். ஒருவேளை இரு கட்சிகளும் கூட்டணி வைத்தால், வட மாவட்டங்களில் 2026-ல் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 15, 2025
காலை 1 கிளாஸ் கற்றாழை ஜூஸ்.. இவ்வளவு நல்லதா!

■காலை கற்றாழை ஜூஸில், சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து குடித்தால், எடை இழப்புக்கு உதவுமாம் ■கற்றாழை சாறுடன் நெல்லிக்காயும் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும் ■கற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழியுமாம் ■மேலும், வாய்ப்புண்ணை விரட்டவும் கற்றாழை ஜூஸ் உதவும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News December 15, 2025
இப்ப இல்லன்னா எப்பவுமே இல்ல: H.ராஜா

பிஹாரில் லாலு பிரசாத் குடும்ப ஆட்சி தூக்கி எறியப்பட்டது போல், TN-ல் கருணாநிதி குடும்பம் எறியப்பட வேண்டும் என H.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்றால், NDA எப்போதும் வெற்றி பெற முடியாது எனவும் கூறியுள்ளார். திமுக அமைச்சர்களை மக்கள் தெருவில் நிற்க வைத்து கேள்வி கேட்க தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


