News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News December 16, 2025
ரெட் கலர் கிறிஸ்துமஸ் தாத்தா எப்படி வந்தார் தெரியுமா?

சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் சிவப்பு நிற ஆடையில் இருக்கிறார் தெரியுமா? சாண்டா கிளாஸ், பச்சை, பிரவுன் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் இருந்த நிலையில், 1931-ம் ஆண்டு கோக கோலா, விளம்பரத்திற்காக சாண்டா கிளாஸுக்கு ‘ரெட்’ கலரில் தனித்துவமான தோற்றத்தை உருவாக்கியது. இதன்மூலம், அவர் உலகம் முழுவதும் புது அடையாளத்தை பெற்றார். அந்த சாண்டா கிளாஸை தான் இன்று நாம் பார்க்கிறோம்.
News December 16, 2025
ஆஸி., படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் இந்தியரா?

ஆஸி.,யில் யூதர்களை குறிவைத்து <<18568504>>துப்பாக்கிச்சூடு<<>> நடத்திய சஜித் அக்ரம், ஐதராபாத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 1998-ல் ஆஸி.,க்கு குடிபெயர்ந்த அவர், அங்கு ஐரோப்பிய பெண்ணை மணமுடித்துள்ளார். மேலும், இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் சென்று, அங்கு ஆயுத பயிற்சி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
ரேஷன் கடைகளில் இலவச நாப்கின் கிடையாது: TN அரசு

ரேஷன் கடைகளில் இலவசமாகவோ, மானிய விலையிலோ நாப்கின்கள் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, இதனை செயல்படுத்த ₹4,000 கோடி செலவாகும் என்பதால், நாப்கின் வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


