News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 21, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணிகள் மாவட்ட வாரியாக தொடங்கியுள்ளன. தகுதியுள்ள மாணவர்கள், ரேஷன் அட்டை நகல், ஆதார் நகல், வயது சான்று நகல், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு 18 வயது வரை தமிழக அரசு மாதம் ₹2,000 வழங்க உள்ளது.
News November 21, 2025
கூட்டணி பேச்சுவார்த்தை: காங்., குழு அமைப்பு?

2026 தேர்தலில் திமுக – காங்., கூட்டணி உறுதியான நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த காங்., தலைமை குழு அமைத்துள்ளதாம். கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சுரே ஜெக்டே, நிவேதி ஹால்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 18 இடங்களில் வென்றது. 2026-ல் காங்., எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்?
News November 21, 2025
முடியாததை முடித்துகாட்டிய நாடுகள்

மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கான திட்டங்களை பல வருடங்களாக செயல்படுத்த முடியாமல் தவிக்கும் நாடுகளுக்கு மத்தியில் சில நாடுகள் அசால்ட்டாக செய்து முடித்துள்ளன. இந்த நாடுகள், தைரியமான முடிவுகளை உறுதியாக கடைபிடித்ததன் மூலம் வெற்றியடைந்துள்ளன. அவை, எந்தெந்த நாடுகள், என்னென்ன செய்துள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


