News August 24, 2024

திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

image

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Similar News

News November 23, 2025

சென்னையில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகள்

image

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நடப்பாண்டில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பட்டன், பேட்டரி போன்ற சிறிய பொருள்கள் விளையாட வழங்கக் கூடாது. அவை எளி–தில் சுவாசப் பாதைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

திமுகவின் சிறப்பு திட்டங்களால் வெற்றி உறுதி: வைகோ

image

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருவதாக வைகோ தெரிவித்துள்ளார். மக்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது என்பதை நிச்சயம் மக்கள் புரிந்துக் கொள்வார்கள். இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றிபெறும் என்றும் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

News November 23, 2025

கருவுறாமை பிரச்னையா? இதோ அற்புத மூலிகை!

image

சதாவரி மூலிகை ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த வேரின் சாறை காலை, மதியம், மாலை என 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை கலந்து குடிக்கலாம். இதனை தொடர்ந்து 5 நாள்களுக்கு செய்துவர மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம், கருவுறாமை, செரிமான கோளாறு கூட சரியாகும் என்கின்றனர். இந்த அற்புதத்தை அனைவரும் அறிய, SHARE THIS.

error: Content is protected !!