News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News December 17, 2025
பிரித்வி ஷாவின் சோகத்தை மறக்க வைத்த டெல்லி அணி

IPL மினி ஏலத்தின் முதல் செட்டில் பிரித்வி ஷாவை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த பிரித்வி ஷா, இதயம் உடைந்த ஸ்மைலியுடன் ’IT’S OK’ என இன்ஸ்டாவில் விரக்தியுடன் பதிவிட்டிருந்தார். ஆனால் அடுத்த ரவுண்டில் பிரித்வி ஷாவை டெல்லி அணி அடிப்படை விலையான ₹75 லட்சத்துக்கு வாங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் பழைய பதிவை நீக்கிவிட்டு, BACK TO MY FAMILY என போஸ்ட் செய்துள்ளார்.
News December 17, 2025
ராஜஸ்தானில் சுமார் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

ராஜஸ்தானில் SIR பணிகள் முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் , 29.6 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்கள் என ECI தெரிவித்துள்ளது. முன்னதாக <<18579079>>மே.வங்கத்தில்<<>> 58 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
News December 17, 2025
ஆனந்த் அம்பானியுடன் மெஸ்ஸி PHOTOS

இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, வந்தாரா வனவிலங்கு மையத்தை அனந்த் அம்பானியுடன் சுற்றிப் பார்த்தார். அங்கு வனவிலங்குகளை பார்த்து மகிழ்ந்தார். இந்தியாவின் சுற்றுப்பயணம் நிச்சயம் அவருக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தந்திருக்கும். வந்தாராவில் ஆனந்த் அம்பானியுடன், மெஸ்ஸி சுற்றிப் பார்த்த போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


