News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News December 19, 2025
உலகின் டாப் 8 பணக்கார குடும்பங்கள் இவர்கள்தான்!

பணக்காரர்கள் என்றாலே அம்பானிகளும், அதானியும் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், உலக பணக்கார குடும்பங்களின் 2025 பட்டியலில் அம்பானி குடும்பமே 8-வது இடத்தில் உள்ளது. அம்பானியையே ஓரங்கட்டிய குடும்பங்களின் லிஸ்ட்டை மேலே கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து எந்த குடும்பம் உச்சத்தில் இருக்கிறது என்பதை தெரிஞ்சிக்கோங்க. SHARE IT.
News December 19, 2025
விஜய்யின் பேச்சு.. ஏமாற்றத்தில் தவெக தொண்டர்கள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய் திறக்கவில்லை என அரசியல் கட்சிகள் சாடியிருந்தன. மேலும், தேசிய அளவில் எதிரொலிக்கும் MGNREGA திட்டத்திற்கு மாற்றான <<18571984>>VB-G RAM G<<>> மசோதா பற்றியாவது ஈரோடு கூட்டத்தில் அவர் பேசுவார் என மக்களும், TVK தொண்டர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், எத்தனை நிமிடங்கள் பேசணும், எதை பேசணும் என்பது தனக்கு தெரியும் என விஜய் கூறினார். இதனால் TVK தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனராம்.
News December 19, 2025
டிச.24-ல் தமிழகம் முழுவதும் போராட்டம்

MGNREGA-க்கு மாற்றாக கொண்டுவந்துள்ள VB-G-RAM-G மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 24-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. TN முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் நடத்த உள்ளன. 100 நாள் வேலைத்திட்டத்தை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாகவும் திமுக கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது. உங்கள் கருத்து?


