News September 1, 2024
சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலானது

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. செப்.1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 5 முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் ₹5 முதல் ₹150 வரை ஏற்கனவே இருந்த கட்டணத்தை விட கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 8, 2025
பள்ளி வேன் விபத்து.. சுக்கு நூறாகி போன கனவுகள்!

பள்ளி வேன் விபத்தில் அக்கா, தம்பி உள்பட 3 மாணவர்கள் உயிரிழந்தது பேரதிர்ச்சி என்றால், ஒரு தந்தையின் கனவு சுக்கு நூறாக நொறுங்கிப் போனது பெருந்துயரம். மகள் சாருமதியை டாக்டராக்க வேண்டும் என்றும், மகன் செழியனை IAS அதிகாரியாக்க வேண்டும் எனவும் தந்தை திராவிட மணி ஆசையில் இருந்திருக்கிறார். அவருக்கு இப்போது கிடைத்திருப்பது கனவுகள் சிதைந்த 2 உடல்கள் மட்டுமே. RIP
News July 8, 2025
காது குடைய buds யூஸ் பண்ணால்… எச்சரிக்கை

காதில் இயற்கையாகவே உற்பத்தியாகும் மெழுகு போன்ற திரவம், நாளடைவில் கெட்டியாகி அதுவே வெளியே விழுந்துவிடும். ஆனால், பட்ஸ், குச்சி (அ) வேறு எதைக் கொண்டும் காதை குடையும்போது கொஞ்சம் தவறினாலும் செவிப்பறை சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், காதுகேளாமை, குமட்டல் & வாந்தியுடன் கூடிய நாள்பட்ட தலைச்சுற்றல், சுவை குன்றுதல், ஏன் சில நேரம் முகத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News July 8, 2025
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானார்

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் காலமானார். உடல் நலக்குறைவால் சில நாள்களாக ஜோத்பூர் எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிர் பிரிந்தது. ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், வழக்கறிஞராகவும் வருமான வரி ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார். அஷ்வினி வைஷ்ணவ் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.