News December 20, 2024
JPC எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை பற்றி ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர் எண்ணிக்கை 39 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிபி சவுதரி தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவில் பாஜக -16 எம்பிக்கள், காங்.,-5, SP, TMC மற்றும் DMK – தலா 2, TDP, ஜன சேனா, YCP, சிவசேனா, JDU, RLD, LJSP(RV), சிவசேனா(UBT), NCP-SP, AAP, BJD மற்றும் CPI(M) கட்சிகளை சேர்ந்த தலா 1 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
Similar News
News March 5, 2026
கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை மஷாத் நகரில் உள்ள ரேசா புனித தளத்தில் நடைபெறும் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், டெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின் முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சடங்கின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் அரசு கூறியுள்ளது.
News March 5, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 628 ▶குறள்:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
News March 5, 2026
ஆதிக்க வெறியின் ஆணவம் அழிப்பு: CM ஸ்டாலின்

திருச்சியில் தமிழில் <<19294297>>‘கர்தவ்ய த்வார்<<>>’ என எழுதப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அது நீக்கப்பட்டது. இந்நிலையில், திருச்சியில் அகற்றப்பட்டது ஹிந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும் தான் என CM ஸ்டாலின் தனது X பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், போலி தமிழ்ப்பற்று காட்டுபவர்களையும், அவர்களுக்கு துணைநின்று TN-ற்கு துரோகம் இழைப்போரையும் மக்கள் அகற்றுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


