News December 7, 2024

இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

image

உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் பில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, UBS சுவிஸ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆண்டறிக்கையில், “2014இல் 1,757ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 2024இல் 2,682ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அவர்களின் எண்ணிக்கை 153இல் இருந்து 185ஆக அதிகரித்துள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 905.6 பில்லியனாக உயர்ந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

BREAKING: மே.வங்க கவர்னராகிறாரா R.N.ரவி?

image

தமிழக கவர்னர் R.N.ரவி, மே.வங்க மாநில கவர்னராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே.வங்க CM மம்தா பானர்ஜி இதை தன் X-பதிவில் குறிப்பிட்டுள்ளார். அம்மாநில கவர்னராக இருந்துவரும் சி.வி.ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா செய்ததால், R.N.ரவி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக தன்னிடம் உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக மம்தா கூறியுள்ளார்.

News March 5, 2026

எரிவாயு விநியோகத்தை குறைக்க முடிவு: GAIL

image

ஈரான் – இஸ்ரேல் போரால் இந்தியாவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக GAIL நிறுவனம் தெரிவித்துள்ளது. கத்தாரில் இருந்து இந்தியா ஆண்டுதோறும் பெருமளவு LNG எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது. தற்போது ஹார்முஸ் நீரிணை மூடல், போர் தாக்கம் காரணமாக இறக்குமதி தடைபட்டுள்ள நிலையில், தங்களது LNG எரிவாயு விநியோகத்தை குறைக்க உள்ளதாக GAIL அறிவித்துள்ளது.

News March 5, 2026

கையாலாகாத பொம்மை CM ஸ்டாலின்: EPS

image

சட்டம் – ஒழுங்கைக் காக்க வேண்டிய CM, ஒரு கையாலாகாத பொம்மை CM-மாக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். நாங்குநேரி கொலை சம்பவத்தின் ரத்த ஈரம் காய்வதற்குள் இடைக்காட்டூரில் மற்றொரு கொலை நடந்துள்ளதாக கூறிய அவர், அரசை கண்டு குற்றவாளிகள் பயப்படவில்லை என்றார். மேலும், பட்டியலின மக்கள் பகுதியில் தாக்குதல் நடக்கிறது என்றால், திமுக இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது என்று தானே அர்த்தம் எனவும் கேட்டுள்ளார்.

error: Content is protected !!