News October 9, 2025
‘Startup’ நிறுவனங்களின் வருகை அதிகரிப்பு: CM ஸ்டாலின்

கோவை கொடிசியாவில் உலக புத்தொழில் மாநாட்டை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால்தான் தமிழகத்தை நோக்கி தொழில் நிறுவனங்கள் வருவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். 2030-க்குள் TN-ஐ ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 9, 2025
கந்த சஷ்டி, விடுமுறை.. நாளை முதல் சிறப்பு அறிவிப்பு

கந்த சஷ்டி, வார விடுமுறையையொட்டி ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் அக்.12 வரை 3 நாள்களுக்கு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், அக்.27-ம் தேதி கந்தசஷ்டி விழாவையொட்டி பிற பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
News October 9, 2025
அமைச்சரின் பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு!

பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்கிரஸார் வருவார்கள்; ஆனால் திமுகவினர் அப்படி அல்ல என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. வேடசந்தூரில் திருமண விழா ஒன்றில், MP ஜோதிமணி முன்னிலையில் இந்த கருத்தை கூறியுள்ளார். ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியினருக்கு கூட்டணியில் உரிய மரியாதை இல்லை என பேச்சு எழுந்துள்ள நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
News October 9, 2025
உலகில் வேஸ்ட் என எதுவும் இல்லை: நிதின் கட்கரி

2027-க்குள் திடக்கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த உலகில் எதுவுமே வேஸ்ட் இல்லை எனவும், டெக்னாலஜி மற்றும் தலைமை பண்பால் அதை பயன்படும் பொருளாக மாற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில், உலக ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளார்.