News April 16, 2025
தமிழ் அறிஞர்களுக்கான உதவித் தொகை உயர்வு

சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் சாமிநாதன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள், எல்லை காவலர்களுக்கும் உதவித் தொகை ரூ.7,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.
Similar News
News December 1, 2025
Sports 360°: கால்பந்தில் கலக்கும் இந்தியா

*U-17 ஆசிய கோப்பை கால்பந்து குவாலிஃபையர் போட்டியில் IND 2-1 என்ற கோல் கணக்கில் IRN-ஐ வீழ்த்தியது. *சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியின் இறுதிப்போட்டியில் பெல்ஜியத்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி. *ITTF யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் திவ்யான்ஷி வெண்கலம் வென்றார். *சையத் மோடி பேட்மிண்டன், மகளிர் இரட்டையரில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் & த்ரிஷா ஜோலி இணை சாம்பியன்.
News December 1, 2025
டிட்வா புயல்.. இன்று கனமழை பொழியுமா?

டிட்வா புயல் கரையை கடக்காமல், கடலோரப்பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ, தாழ்வுப்பகுதியாகவோ இன்று நிலைகொள்ள வாய்ப்புள்ளது. அவ்வாறு நிலைகொண்டால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழைக்கான சூழல் ஏற்படும். அதன் பிறகு மீண்டும் கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளை நோக்கி வந்து, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிச.19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 14 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் SIR பணிகள், டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.


