News April 16, 2025

தமிழ் அறிஞர்களுக்கான உதவித் தொகை உயர்வு

image

சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் சாமிநாதன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள், எல்லை காவலர்களுக்கும் உதவித் தொகை ரூ.7,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

Similar News

News December 10, 2025

TN-ல் அடுத்த 100 நாள்களில் தேர்தல்: CV சண்முகம்

image

அதிமுகவை அழிக்க சில அரசியல் புரோக்கர்கள் முயற்சி செய்வதாக EX அமைச்சர் CV சண்முகம் விமர்சித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் அடுத்த 100 நாள்களில் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், உறவாடி கெடுப்பவர்களிடம் அதிமுகவினர் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், நேரடி எதிரிகள், மறைமுக துரோகிகளுக்கு வரும் தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டப்படும் என சூளுரைத்தார்.

News December 10, 2025

புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

image

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ₹750 மதிப்பில் 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிப்பருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பு வரும் 3-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார்.

News December 10, 2025

ஷூட்டிங்கே போகல.. அதுக்குள்ள ₹80 கோடி லாபம்!

image

‘ஆவேஷம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ ஷூட்டிங்கே இன்னும் தொடங்காத நிலையில், தயாரிப்பாளர் சூர்யாவுக்கு கிட்டத்தட்ட ₹80 கோடி வரை லாபம் கிடைத்து விட்டதாம். படத்தின் வெளிநாட்டு உரிமம், ஆடியோ, டிஜிட்டல் ரைட்ஸ் ஆகியவை விற்கப்பட்டு, இந்த ஜாக்பாட் சூர்யாவுக்கு அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சூர்யா – ஜித்து மாதவன் காம்போ மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளதையும் இது காட்டுகிறது.

error: Content is protected !!