News April 16, 2025
தமிழ் அறிஞர்களுக்கான உதவித் தொகை உயர்வு

சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் சாமிநாதன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள், எல்லை காவலர்களுக்கும் உதவித் தொகை ரூ.7,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.
Similar News
News December 3, 2025
TNPSC Annual Planner 2026 வெளியானது!

2026-ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது. இதன்படி, குரூப் 1 – செப்.6, குரூப் 2/ 2A – அக்.25, குரூப் 4 – டிச.20, தொழில்நுட்பத் தேர்வு (நேர்காணல்) – நவ.14, நேர்காணல் இல்லாதது – ஆக.3, டிப்ளமோ/ ஐடிஐ அளவிலான தொழில்நுட்பத் தேர்வு – செப்.20 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வருவதால், அனைத்து தேர்வுகளும் ஜூலைக்கு பிறகே தொடங்குகிறது. SHARE IT.
News December 3, 2025
கேஸ் மாஸ்க் உடன் Entry கொடுத்த MP-க்கள்

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இதனை வலியுறுத்தும் வகையில் எதிர்க்கட்சி MP-க்கள் கேஸ் மாஸ்க் உடன் நாடாளுமன்றத்துக்கு சென்றனர். காற்றுமாசுபாடு விவகாரத்தில் PM மோடி தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
News December 3, 2025
வீட்டில் தீபம் ஏற்றும்போது இந்த தவறை செய்யாதீர்கள்..

*தீபத் திருநாளன்று விளக்குகளை சுத்தம் செய்யக்கூடாது. *கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. *மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். *6 விளக்குகளுக்கு மேல் ஏற்ற வேண்டும். *எல்லா திசைகளிலும் எரியும்படி, தீப விளக்குகளை வைக்க வேண்டும். *கோலம் போட்டு நடுவில் விளக்குகளை வைக்கலாம். *இயன்றவற்றை நைவேத்யமாக படைத்து, தீபாராதனை காட்டிவிட்டு பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


