News March 4, 2025
கரும்பு கொள்முதல் விலை உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி!

2024 – 25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கு கரும்பு கொள்முதல் விலையை அரசு உயர்த்தியுள்ளது. 9.50% (அ) அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ₹3,151ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 9.85% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ₹3,267ஆகவும், 10.10% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ₹3,344ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள்.
Similar News
News March 4, 2025
ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய யுவராஜ் சிங் தந்தை

ரோஹித் உருவத்தை விமர்சித்த ஷாமா முகமது பேச்சுக்கு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் உருவ அமைப்பை அவமதிக்கும் விதமாக இதுவரை யாரும் பேசியது இல்லை எனவும், PAK-இல் மட்டுமே இப்படி விமர்சிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். வீரர்களை அவமதிக்கும் இத்தகைய பேச்சுக்கு ஷாமா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் சாடியுள்ளார்.
News March 4, 2025
தமிழகம் மீது மொழித் திணிப்பு ஏன்? முதல்வர் கேள்வி

இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெளிவாக விளக்கி உள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில், மொழித் திணிப்பு ஏன்?, மும்மொழிக் கொள்கையால் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் ஏதாவது ஒன்றை கூற முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர், ஏகாதிபத்திய மனோபாவம் கொண்ட சிலரது வசதிக்காக தமிழ்நாட்டின் மீதான மொழித் திணைப்பை ஏற்கமாட்டோம் என கூறியுள்ளார்.
News March 4, 2025
ரோட்ல பெட்ரோல் காலியா? Fuel@Call ஆப் யூஸ் பண்ணுங்க!

ட்ரிப் போகும் போது, பெரிய பிரச்னையே ஆள் அரவமற்ற இடத்தில் வண்டி பெட்ரோல் காலியாகி நின்றுவிடுவது தான். வெறுப்பேற்றும் இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு கண்டுபிடித்துள்ளது. Fuel@Call என்ற ஆப்பை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பில் எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்க ஆர்டர் கொடுத்தால், உங்களை தேடி பெட்ரோல்/டீசலை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். SHARE IT.