News May 21, 2024
காய்கறிகளின் விலை உயர்வு

தமிழ்நாட்டில் வெயில் வாட்டிய நிலையில், தற்போது கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது. இதனால், காய்கறிகளின் வரத்து வெகுவாகக் குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பூண்டு ₹400, பீன்ஸ் ₹300, இஞ்சி ₹200, மிளகாய் ₹100, கேரட் ₹90, உருளைக்கிழங்கு ₹80, பீட்ரூட் ₹76, சின்ன வெங்காயம் ₹76, பெரிய வெங்காயம் ₹40, கத்தரிக்காய் ₹75, முட்டைகோஸ் ₹50, முருங்கைக்காய் ₹65, தக்காளி ₹44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News November 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 525
▶குறள்:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
▶பொருள்: வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
News November 20, 2025
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் தவறு: நயினார்

மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு குறித்து <<18327298>>CM ஸ்டாலின்<<>> வைத்த குற்றசாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். திட்ட அறிக்கையில், 2011 மக்கள்தொகை கணக்கீட்டை குறிப்பிட்டது, திட்டத்துக்கான சரியான நோக்கம் இடம்பெறாதது உள்ளிட்ட தவறுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அறிக்கையில் மெட்ரோவிற்கான தேவையை நியாயப்படுத்தக்கூட TN அரசு முன்வரவில்லை எனவும் சாடியுள்ளார்.
News November 20, 2025
ஆம்ஸ்ட்ராங் வழக்கு; CBI-க்கு இடைக்கால தடை

ஆம்ஸ்ட்ராங் வழக்கு CBI-க்கு மாற்றப்பட்டதை எதிர்த்து TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்திருந்தது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றியது சரியானது அல்ல அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, அனைத்து வழக்குகளையும் CBI-க்கு ஏன் மாற்ற வேண்டும் என கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், எதிர்மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டு CBI விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.


