News April 2, 2024
மருந்து, மாத்திரைகளின் விலை உயர்வு

அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளின் விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால் மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்ததை தொடர்ந்து, பாராசிட்டமால், ஃபெர்னோபார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின் உள்பட 800 மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்தது. நேற்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.
Similar News
News January 22, 2026
அருமருந்தான கிராம்பு நீரை தயாரிப்பது ஈஸி தான்!

சர்க்கரை நோய், வாய் துர்நாற்றம், ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும் கிராம்பு நீரை எளிதாக தயார் செய்யலாம். முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். சிறிது கிராம்புகளைச் சேர்த்து 5-7 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க வைத்து, பின்னர் அணைக்கவும். அதனை வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கலாம். கர்ப்பிணிகள், ரத்த உறைவு, குறைந்த ரத்த சர்க்கரை அளவு பிரச்னை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
News January 22, 2026
தேர்தல் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை: GK மணி

அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தரப்பு திமுகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என GK மணி தெரிவித்துள்ளார். மேலும் திருமாவளவன் இருக்கும் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைய முடியுமா என்ற கேள்விக்கு, அரசியலில் என்ன வேண்டுமானலும் நடக்கலாம் என அவர் பதில் அளித்துள்ளார்.
News January 22, 2026
ஜெயலலிதா வருமான வரி வழக்கில் அதிரடி உத்தரவு!

ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், வரி வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு சென்னை HC உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசான ஜெ.தீபா & தீபக் ஆகியோருக்கு, அவர் செலுத்த வேண்டிய ₹36 கோடி வரியை வசூலிக்கும் வகையில் IT நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில், வரி பாக்கி குறித்து 2 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்யும்வரை, வரி வசூலை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.


