News June 2, 2024
மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வரம்பு உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பை ( Gratuity limit) 25% உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அதிகபட்ச கருணைத் தொகை ₹20 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கருணைத் தொகை ஜனவரி 1, 2024 முதல் தொடங்குகிறது. பணிக்கொடைக்கு தகுதி பெற ஒரு ஊழியர் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். முன்னதாக மார்ச் 7ஆம் தேதி 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
Similar News
News September 20, 2025
நாகையில் விஜய்.. பூம்புகாரை கையிலெடுத்த ஸ்டாலின்

கீழடிக்கு அடுத்ததாக, பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நாகை, திருவாரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், அதன் அருகில் உள்ள பூம்புகார் குறித்து CM கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே, கடந்த வார பரப்புரைக்கிடையே, கொள்கையில்லா கூட்டத்தை சேர்த்து, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என தெரிவித்திருந்தார்.
News September 20, 2025
காயங்கள், வலிகளை மறக்கவில்லை: சாம் பிட்ரோடா

பாக்., உள்பட அண்டை நாடுகளில் இருக்கையில் இந்தியாவில் உள்ளது போல உணர்கிறேன் என்று காங்கிரஸை சேர்ந்த சாம் பிட்ரோடா கூறியதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிட்ரோடா, நம் அண்டை நாடுகளுக்கும் நமக்கும் உள்ள பொதுவான வரலாறு, சமூக, கலாசார ஒற்றுமைகளின் அடிப்படையில் அப்படி கூறியதாகவும், அந்நாடுகளால் ஏற்பட்ட காயங்கள், வலிகளை மறக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
News September 20, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து, ₹145-க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு வெள்ளி விலை விற்கப்படுவது இதுவே முதல்முறை. குறிப்பாக, கடந்த 2 நாள்களில் மட்டும் ₹4,000 அதிகரித்துள்ளது.