News June 14, 2024
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2024 ஜன.1 முதல் 9% உயர்த்தி வழங்க உள்ளது. அடிப்படை ஊதியம் அகவிலை ஊதியத்தில் 239% ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஜனவரி முதல் 6 மாத நிலுவைத் தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
BREAKING: முதல்முறையாக அரசு அறிவித்தது

டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு முதல்முறையாக அறிவித்துள்ளது. PM மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செங்கோட்டை அருகே நடந்தது கோழைத்தனமான சம்பவம் என்றும், சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு நீதியின் முன்பு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் சூளுரைத்தார்.
News November 12, 2025
‘மந்தாகினி’ ஆக மிரட்டும் பிரியங்கா சோப்ரா

பிரமாண்டத்திற்கு பெயர்போன ராஜமெளலியின் அடுத்த படைப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. PAN இந்தியா படமாக உருவாகியுள்ள GLOBETROTTER-ல் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக மகேஷ் பாபுவின் கதாபாத்திர அறிமுகம் செய்யப்படவுள்ளது. வரும் 15-ம் தேதி படத்தின் டைட்டில் ரிலீஸ் நிகழ்வு, ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
News November 12, 2025
சந்தேக வளையத்திற்குள் Al-Falah பல்கலைக்கழகம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில், ஹரியானாவின் Al-Falah பல்கலை. சந்தேக வளையத்திற்குள் சிக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷாஹீன் சயீத், முஸம்மில் ஷகீல் உள்ளிட்ட பல டாக்டர்கள் Al-Falah பல்கலை.-யில் பணியாற்றியுள்ளனர். தீவிரவாத நடவடிக்கைகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் <<18268646>>நிசார்-உல்-ஹசன்<<>> எப்படி பல்கலை.-யில் பணி நியமனம் செய்யப்பட்டார் என்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.


