News November 20, 2024
ரயில்களில் ஜெனரல் கோச் அதிகரிப்பு

நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்களில் தேவைக்கேற்ப கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அவர்களுக்கு அதிக வசதிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
₹3,000 டோல்கேட் FAStag பாஸ் நாளை அமலுக்கு வருகிறது

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FAStag திட்டம் நாளை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வணிக நோக்கமற்ற கார், ஜீப், வேன்கள் நாடு முழுவதும் 200 முறை டோல்கேட்களில் கட்டணமின்றி செய்ய முடியும். Rajmarg Yatra செயலியில் PASS வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண், வாகன பதிவு எண், பாஸ்டேக் ஐடி உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம். SHARE IT.
News August 14, 2025
ஆசிய கோப்பை: கில்லை ஓரங்கட்டும் கம்பீர்?

ஆசிய கோப்பைக்கான அணியில் கில்லை சேர்ப்பதில் கம்பீர் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20-களில் கில் கன்சிஸ்டன்சியுடன் விளையாடினாலும், பவர்பிளேயில் அதிரடியாக விளையாடாதது ஒரு விமர்சனமாக உள்ளது. ஆனால் சாம்சன், அபிஷேக் ஷர்மா 40 பந்துகள் ஆடினாலே ஆட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்பதால், கில்லுக்கு பதில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்க கம்பீர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
News August 14, 2025
பெண்கள் எப்போதும் வளைந்து கொடுக்க கூடாது: ஸ்வாசிகா

15 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் தனக்கு, இதுவரை பாலியல் தொந்தரவு இருந்ததில்லை என நடிகை ஸ்வாசிகா தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் இந்த பிரச்னை இருப்பதாகவும், பெண்கள் தைரியத்துடன் எந்த ஒரு இடத்திலும் வளைந்து செல்லக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஒருவர் தவறாக நடக்க முயன்றால் அவர்களை எதிர்கொள்ளவும், சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்க கூடாது என்றும் கூறியுள்ளார்.