News March 27, 2024
பங்கு சந்தைகளில் அந்நிய முதலீடு அதிகரிப்பு

நடப்பு மார்ச் மாதத்தில், முதல் 22 நாள்களில் மட்டும் இந்திய பங்குச் சந்தையில் ₹38,000-க்கும் அதிகமாக வெளிநாட்டினர் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி போன்ற அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில், அந்நிய முதலீட்டாளர்கள் ₹1,539 கோடி முதலீடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 18, 2026
ALERT: அவசர எண்கள் .. இத கவனியுங்க!

பொதுவாக, அனைத்து மருத்துவ அவசர உதவிக்கும் ‘108’ என்ற எண்ணில் அழைப்போம். ஆனால், வேறு சில எண்களும் சேவையில் உள்ளன *102 – கர்ப்பிணி & பச்சிளம் குழந்தைகளின் உதவிகளுக்கு *1073 – சாலை விபத்துகளுக்கு *104- இலவச மருத்துவ ஆலோசனைகளுக்கு. இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், அனைத்து மருத்துவ அவசரத்திற்கும் ‘108’-லிலும் அழைக்கலாம். இந்த அத்தியாவசிய செய்தியை அனைவருக்கும் பகிரவும்.
News February 18, 2026
தமிழகம் முழுவதும் 5 லட்சம் சந்தன மரங்கள்: ஸ்டாலின்

தமிழகத்தின் கார்பன் உமிழ்வுகளை குறைக்க 2030-க்குள் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காலநிலை உச்சி மாநாடு 2.0-வில் பேசிய அவர், மாநிலம் முழுவதும் நடவு செய்ய 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும் என்றார். மேலும், அரசு நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் இணைந்து பசுமை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து, கார்பன் உமிழ்வுகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
News February 18, 2026
எந்த கிழமையில் எந்த கடவுளை வழிபட வேண்டும்?

கடவுளை வழிபட நேரம், காலம் இல்லை என்றாலும், ஒவ்வொரு நாள்கள் ஒவ்வொரு கடவுளையும் தனியாக வணங்க விஷேச நாட்கள் உள்ளன. ஞாயிறன்று சூரிய பகவானை வழிபட வேண்டும். திங்களன்று சிவனையும், செவ்வாயில் முருகன், துர்கை அம்மனையும் வழிபடலாம். புதனில் விஷ்ணு, விநாயகரையும், வியாழக்கிழமையில் தட்சணாமூர்த்தியை வணங்க வேண்டும். வெள்ளியில் மகாலட்சுமி வழிபாடும், சனிக்கிழமையில் அனுமன், பெருமாளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.


