News July 13, 2024
அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2 வாரங்களாக குறைந்து வந்தது. சுமார் ₹14.198 ஆயிரம் கோடி (1.7 பில்லியன் டாலர்) வீழ்ச்சியடைந்து, ₹54.45 லட்சம் கோடியாக (652 பில்லியன் டாலர்) இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வார இறுதி நிலவரப்படி, அந்நிய செலாவணி கையிருப்பு ₹4,34,30 ஆயிரம் கோடி (5.2 பில்லியன் டாலர்) அதிகரித்து, ₹54.87 லட்சம் கோடியாக (657 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது.
Similar News
News November 21, 2025
FLASH: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களாக மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. 1 சவரன் நேற்று ₹800 குறைந்த நிலையில், இன்று மேலும் ₹320 சரிந்துள்ளது. தற்போது சென்னையில், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,460-க்கும், 1 சவரன் ₹91,680-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் கடந்த 2 நாள்களில் கிலோவுக்கு ₹7,000 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News November 21, 2025
BREAKING: அதிமுக எம்எல்ஏ கொலை.. பரபரப்பு தீர்ப்பு

2005-ல் கும்மிடிப்பூண்டி MLA-வாக இருந்த சுதர்சனம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவாரியா கும்பலில் 3 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தண்டனை விவரம் நவ.24-ல் தெரிவிக்கப்படும் என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதுதான் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படமாகும்.
News November 21, 2025
ஆன்மிக செல்வந்தர்களாக இருக்க வேண்டும்: AR ரஹ்மான்

உங்கள் ஈகோ போய்விட்டால், நீங்கள் கடவுளை போல வெளிப்படையானவராக மாறுகிறீர்கள் என AR ரஹ்மான் கூறியுள்ளார். சூஃபியிசம் பற்றி பேசிய அவர், உங்களின் சுயத்தை மறைக்கும் காமம், பேராசை, பொறாமை, முன்முடிவு என அனைத்தும் இறக்க வேண்டும் என்றார். நாம் அனைவரும் ஆன்மிக ரீதியாக செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்ற ரஹ்மான், ஆன்மிக செல்வம் வரும்போது, பொருள் செல்வம் பின்தொடரும் என்றும் கூறினார்.


