News March 20, 2025
புகார்கள் அதிகரிப்பு: RBI அதிருப்தி

வங்கிகள் மீது புகார்கள் அதிகரித்து வருவதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். வங்கி சேவைகள் குறித்து சமூகவலைதளங்களில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை புகாராக பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வங்கி அதிகாரிகள், நிர்வாகத்தினர் நினைத்தால் இதற்கு எளிதாகத் தீர்வு காண முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News March 20, 2025
ஏப்ரலில் இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை

ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, வரும் ஏப்ரலில் வங்கிகளுக்கு, தமிழ்நாட்டில் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. •ஏப்ரல் 6- ராம நவமி •ஏப்ரல் 10- மகாவீர் ஜெயந்தி. •ஏப்ரல் 14- தமிழ் புத்தாண்டு •ஏப்.18 – புனித வெள்ளி. தவிர 4 ஞாயிறு, 2 & 4ஆம் சனிக்கிழமையும் விடுமுறை என்பதால் மொத்தம் 10 நாட்கள் வங்கிகள் செயல்படாது. வாரம் 5 நாட்கள் வேலைநாள் அமலுக்கு வந்தால் மேலும் 2 நாள் விடுமுறை அதிகரிக்கும்.
News March 20, 2025
சில்க் ஸ்மிதா கொலையா? – சகோதரர் பகீர் குற்றச்சாட்டு

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா இறந்து சுமார் 30 ஆண்டுகளாகியும் அவரது மரணத்தில் இருக்கும் மர்மத்திற்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இந்நிலையில், சில்க்கை அவரது உதவியாளர் ராதாகிருஷ்ணன் கொலை செய்துவிட்டு சொத்துகளை அபகரித்து விட்டதாக சில்கின் சகோதரர் நாக வரபிரசாத் குற்றஞ்சாட்டியுள்ளார். ராதாகிருஷ்ணன் எங்கே இருக்கிறார் என அறிந்தால் வழக்குத் தொடுப்பேன் என்றும் சில்கின் சகோதரர் கூறியுள்ளார்.
News March 20, 2025
மீண்டும் தாக்கிய இஸ்ரேல்: காசாவில் மரண ஓலம்

காசா மக்களின் வாழ்க்கை மீண்டும் கண்ணீர்க் கடலில் தத்தளிக்கத் தொடங்கியுள்ளது. பணயக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இன்று நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.