News March 30, 2025

₹500 கோடிக்கு Income Tax மோசடி

image

தமிழகத்தில் மிகப்பெரிய வருமான வரி மோசடி நடந்துள்ளதாக IT-யின் புலனாய்வு பிரிவு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. பொது & தனியார் நிறுவன ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் ₹500 கோடிக்கு வருமான வரி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, 22,500 பேர் போலி ஆவணங்கள் மூலம் ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Similar News

News April 9, 2026

மத்திய அரசிடம் வீரத்தை காட்டுங்க EPS: அன்பில்

image

EPS ஒருமுறையாவது நீட் வேண்டாம் என்றோ, மும்மொழி கொள்கையை திணிக்காதீர்கள் என்றோ PM மோடியிடம் வலியுறுத்தி இருக்கிறாரா என அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். CM ஸ்டாலின் பற்றி விமர்சிக்கும் EPS-க்கு பதிலடி கொடுத்த அவர், அண்ணா பெயரில் கட்சி வைத்துகொண்டு, இருமொழி கொள்கையை காக்க EPS-ஆல் முடிந்ததா எனவும் கேட்டார். மத்திய அரசிடம் வீரத்தை காட்டாமல் CM மீது மலிவான விமர்சனத்தை கொட்டுவதாகவும் சாடியுள்ளார்.

News April 9, 2026

3 மாநில தேர்தல்: 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

image

பிற்பகல் 3 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 72.40% வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. கேரளாவில் 62.71% மற்றும் அசாமில் 75.91% வாக்குகள் பதிவாகியுள்ளன. வெயில் சுட்டெரித்த போதும், வாக்குச்சாவடிகளில் போதுமான வசதிகள் செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அசாமில் 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், புதுச்சேரி, கேரளாவில் 6 மணியுடன் நிறைவடைகிறது.

News April 9, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹2,000.. காங்கிரஸ் வாக்குறுதி

image

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம்தோறும் ₹2,000 வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் அக்கா திட்டம், காலியான 3 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கொடுத்துள்ளது.

error: Content is protected !!