News August 16, 2024
116 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு: WHO

கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 19, 2025
மதிப்பு கூட்டும் மையங்கள்: 1.50 கோடி வரை மானியம்

100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்களுக்கு ₹1.50 கோடி வரை மானியம் கிடைக்கும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து , வங்கியில் கடன் ஒப்புதல் பெற்றபின், மாவட்ட நிர்வாகத்திடம் மானியம் பெறுவதற்காக விண்ணப்பிங்களாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 19, 2025
32,438 காலியிடங்கள்… RRB தேர்வு ஒத்திவைப்பு

நவ.17 முதல் டிசம்பர் கடைசி வாரம் வரை நடக்கவிருந்த குரூப்-D பணிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக RRB அறிவித்துள்ளது. மேற்கண்ட தேர்வு வரும் 27-ம் தேதி முதல் ஜனவரி 16, 2026 வரை நடைபெறும். நாளை முதல் இதற்கான இடம், தேதி விவரங்களை இணையத்தில் அறியலாம். தேர்வுக்கு 4 நாள்கள் முன்பாக e-call letters-ஐ டவுன்லோடு செய்துகொள்ளலாம். மொத்தம் 32,438 காலியிடங்களை நிரப்ப இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன.


