News August 16, 2024
116 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு: WHO

கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 20, 2025
மத உணர்வை தூண்டினால் கவனமாக இருங்கள்: CM

தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்வதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அவர், ஒற்றுமையாக வாழும் மக்களை சிலர் பிரிக்க நினைப்பதாகவும், மதத்தின் பெயரால் ஒருவர் உங்களது உணர்வுகளை தூண்டினால், அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்புவோருக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
கார் விபத்தில் சிக்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. மத்திய கைலாஷ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் மீது சிவகார்த்திகேயனின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
News December 20, 2025
குழந்தைக்கு புழு தொல்லையா? இதோ தீர்வு

வயிற்றில் புழு தொல்லை இருப்பதால் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லையா? இதனை சரி செய்ய சித்த மருத்துவத்தில் வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாய்விளங்கம் 25 g, மிளகு 3-5 g எடுத்து, குப்பைமேனி சாறுடன் கலந்து, வெயிலில் வைக்கவும். சாறு வற்றியவுடன், பொடிசெய்து, அரை டீஸ்பூன் எடுத்து, 3 நாள்களுக்கு கொடுக்கவும். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.


