News August 16, 2024

116 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு: WHO

image

கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 3, 2026

தேர்தலில் யாருக்கு வெற்றி.. லயோலா கணித்துக்கணிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் IPDS-ன் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 234 தொகுதிகளில் 81,375 பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில் ஸ்டாலின் முதலிடம், விஜய் 2-ம் இடம், EPS 3-ம் இடம் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் இந்துக்கள்-81.71%, கிறிஸ்துவர்கள்-10.55%, இஸ்லாமியர்கள்-7.75% பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2026

CPS பென்ஷன்தாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!

image

<<18749969>>TAPS திட்டம்<<>> செயல்படுத்தப்பட்டபின், பென்ஷன் பெறுவதற்கான தகுதி, பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், CPS-ன் கீழ் பணியில் சேர்ந்து இடைப்பட்ட காலங்களில்(23 ஆண்டுகள்) ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்பு கருணை பென்ஷன் வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. TAPS திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ₹13,000 கோடி செலவாகும்.

News January 3, 2026

இரும்புக்கரம், அன்புக்கரம்: CM ஸ்டாலின் அறிவுரை

image

சீருடை பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை CM ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், போலீசாருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் முறையாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். போதைப்பொருள் விவகாரத்தில் சமரசமின்றி செயலாற்ற வேண்டும் என கூறிய அவர், குற்றம் செய்பவர்களிடம் இரும்புக்கரத்தையும், புகார் அளிக்க வருபவர்களிடம் அன்புக்கரத்தையும் காட்டுங்கள் என்று அறிவுறுத்தினார்.

error: Content is protected !!