News August 16, 2024
116 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு: WHO

கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 20, 2025
அரசன் படத்தில் சந்திரா கேரக்டரா?

சிம்புவின் அரசன் படத்திற்கு ஆடியன்ஸிடம் அதிபயங்கர எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குறிப்பாக வடசென்னை கேரக்டர்கள் யார் யாரெல்லாம் இருக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், அரசன் படத்தில் சந்திரா கேரக்டர் இடம்பெறுமா என ஆண்ட்ரியாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ’இருக்கலாம்’ என பதிலளித்துள்ளார். இதனால் அரசனில் சந்திரா கேரக்டர் இடம்பெறும் என ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
News November 20, 2025
‘SORRY அம்மா.. நான் சாகப் போறேன்’

டெல்லியில் 10-ம் வகுப்பு மாணவன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தனது பள்ளி HM, ஆசிரியர்கள் மனரீதியாக டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதிவைத்துள்ளார். Sorry அம்மா பலமுறை உங்களை காயப்படுத்தி இருக்கிறேன், கடைசி முறையாக இப்போதும் அதை செய்துள்ளேன்; எனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
இந்த எண்களை தெரியாமல் இருக்காதீங்க!

அவசர நேரத்தில் இந்த ஹெல்ப்லைன் எண்களை தெரிந்து வைத்திருப்பது உங்களது உயிரையே காக்கலாம். தீயணைப்புத்துறை – 101, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு- 181, குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் – 1098, குழந்தைகள் காணாமல் போனால்- 1094, ராகிங் தொல்லைக்கு ஆளானால்- 1800-180-5522, இலவச மருத்துவத்துக்கு – 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இது அனைவருக்கும் உதவும், கண்டிப்பாக SHARE THIS.


