News August 16, 2024
116 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு: WHO

கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 7, 2026
ஜனநாயகன் ரிலீஸ்.. செங்கோட்டையன் எச்சரிக்கை

‘ஜனநாயகன்’ ரிலீஸை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். <<18779627>>தணிக்கை சான்றிதழ் சிக்கல்<<>> குறித்த கேள்விக்கு அவர், ஜனநாயகன் ரிலீஸில் தடையை ஏற்படுத்தக் கூடியவர்களுக்கு அது எவ்விதத்திலும் வலுசேர்க்காது என்றும் நாளைய CM விஜய்யின் படத்தை தடுப்பது சரியல்ல எனவும் தெரிவித்துள்ளார். அப்படி யாராவது எண்ணினால் அது அவர்களுக்கு பாதகமாக முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
News January 7, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 7, 2026
இந்தியர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை: ஈரான் தூதர்

ஈரானில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், <<18773769>>இந்தியர்கள்<<>> தேவையில்லாமல் அந்நாட்டிற்கு பயணிக்க வேண்டாம் எனவும், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், தங்கள் நாட்டில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதலி தெரிவித்துள்ளார். மேலும், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.


