News August 16, 2024
116 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு: WHO

கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 10, 2026
‘TAPS’.. புதிய மொந்தையில் பழைய கள்: EPS விளாசல்

மத்திய அரசின் UPS-யை பெயர் மாற்றம் செய்து <<18749969>>அறிவிக்கப்பட்டுள்ள TAPS<<>>, ஒரு ஏமாற்றும் திட்டம் என EPS விமர்சித்துள்ளார். இதனை, ‘புதிய மொந்தையில் பழைய கள்’ எனவும் சாடியுள்ளார். அத்துடன், பழைய பென்ஷன் திட்டத்தின் முக்கிய அம்சமான ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் அவ்வப்போது பென்ஷனை உயர்த்தி மறுநிர்ணயம் செய்யும் பரிந்துரை TAPS-ல் இல்லை எனவும், 10% சம்பளம் பிடித்தம் ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 10, 2026
மத்திய அரசின் முடிவை வரவேற்று PM-க்கு CM கடிதம்

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் இதை மிகுந்த கவனத்தோடு செயல்படுத்த மாநில CM-க்கள், பிரதிநிதிகள் குழுவை அமைக்க வலியுறுத்திய அவர், சமூக இயக்கவியல், சாதிய கட்டமைப்பு வேறுபாடுகளை கவனத்தோடு கையாளவில்லை என்றால், சமூக பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
News January 10, 2026
‘நான் சாகப் போறேன்.. என் சாவுக்கு காரணம் இதுதான்’

‘எனது தற்கொலை எண்ணங்களை வெல்வேன் என நினைத்தேன். ஆனால், அதில் தோல்வி அடைந்துவிட்டேன். இந்த வேலை எனக்கு கடினமாக இருக்கிறது’. டெல்லி சாகேத் மாவட்ட கோர்ட்டில் எழுத்தாளராக பணியாற்றிய ஹரிஷ் சிங் மஹரின் கடைசி வரிகள் இவை. 60% மாற்றுத் திறனாளியான அவர், வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் சோக முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள்!


