News August 16, 2024
116 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு: WHO

கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 16, 2025
பார்பி டாலாக ஜொலிக்கும் ஸ்ரீலீலா

நடிகை ஸ்ரீலீலாவின் ஒரு நடனத்துக்காக தென் இந்தியாவில் இருந்து வட இந்தியா வரை சினிமா உலகமே காத்துக்கிடக்கிறது.. அப்படி பெர்ஃபாமன்ஸில் பின்னி பெடலெடுக்கும் ஸ்ரீலீலா, இன்ஸ்டாவில் ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கவும் தவறுவதில்லை. வாரத்திற்கு ஒரு போட்டோஷூட்டை பகிர்ந்து இளைஞர்களின் தூக்கத்தை கொள்ளையடிக்கிறார். அப்படி நேற்று அவர் பகிர்ந்த போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்.
News December 16, 2025
பாஜகவை பார்த்து CM ஸ்டாலினுக்கு பதற்றம்: வானதி

TN-ல் பாஜக நுழைய முடியாது என <<18566154>>CM ஸ்டாலின்<<>> திருவண்ணாமலை கூட்டத்தில் பேசியதற்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். பாஜக குறித்த பதற்றம் CM ஸ்டாலினுக்கு உள்ளதால்தான் மேடைதோறும் மோடி, அமித்ஷா பற்றி தொடர்ந்து பேசி வருகிறார் என அவர் சாடியுள்ளார். மேலும் சட்டப்பேரவையில் கடந்த 4 ஆண்டுகளாக எங்களது கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
காங்கிரஸில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அன்மையில் நடைபெற்ற பிஹார் சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்து பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைப்பது குறித்தே அவர் அலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


