News March 29, 2024
மெட்ரோ, பஸ்சில் வேலைக்கு வந்தால் ஊக்கத்தொகை!

சாலைகளில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால் பெங்களூரு, இந்தியாவின் டிராபிக் தலைநகரமாக மாறி வருகிறது. இதற்கு தீர்வாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதன்படி, மெட்ரோ ரயில், பஸ் போன்றவற்றில் வேலைக்கு வரும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும், பைக், கார்களில் வருவோருக்கு பார்க்கிங்கிற்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன.
Similar News
News November 25, 2025
கனமழை.. பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, *அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடுவது & மிதிப்பது தவிர்க்கவும். *மின் கம்பம் அருகில் செல்வதையோ & தொடுவதையோ தவிர்க்கவும். *தெரு மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் நடப்பதை தவிர்க்கவும்.
News November 25, 2025
மீனவர் நலனில் PM மோடிக்கு அதிக அக்கறை: RN ரவி

மீனவர் நலனில் PM மோடி அதிக அக்கறை செலுத்தி வருவதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மீனவர் தின விழாவில் பேசிய அவர், மீனவ சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும், மீனவர்கள் பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
News November 25, 2025
புளிச்சக் கீரையை இவர்கள் சாப்பிடவே கூடாது.. ALERT!

புளிச்சக் கீரையில் நிறைய நார்ச்சத்துக்கள், ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது HIGH BP, இதய பிரச்னை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், சிலர் மட்டும் இதனை உண்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நலனை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.


