News August 25, 2024
விஜயகாந்த் திருவுருவச்சிலை திறப்பு

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் இந்த உருவச்சிலையை திறந்து வைத்தார். இவ்விழாவில் அவரது மகன்கள், கட்சி நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். கமல், இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 5, 2025
குழந்தைகளுடன் பேசுங்கள்

பெற்றோர் – குழந்தைகள் இடையிலான உறவு சரியாக இல்லாததே, குழந்தைகளின் ஆளுமைத்திறன் குறைபாடு முதல் தற்கொலை எண்ணம் வரை காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதும், தேவைகளை நிறைவேற்றுவதும், கல்வி அளிப்பதும் மட்டும் பெற்றோரின் கடமை அல்ல. அவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப அவர்களுடன் நல்ல புரிதலை ஏற்படுத்தி, வழிகாட்ட வேண்டும். வேறு என்னவெல்லாம் செய்யலாம்?
News November 5, 2025
‘7ஜி ரெயின்போ காலனி 2′ அப்டேட்

‘7ஜி ரெயின்போ காலனி’ 2-ம் பாகத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தில் இறந்த அனிதா கேரக்டர், இந்த பாகத்தில் இருக்கிறதா இல்லையா என்பது சஸ்பென்ஸ் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் கால்ஷீட் கொடுத்தால் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும்
‘புதுப்பேட்டை 2’ படங்களை எடுக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
உங்களுக்கு ஃபோனா? ஃபோனுக்காக நீங்களா?

ஸ்மார்ட்போன் வழியாக தினசரி இணையம் பயன்படுத்துவோர், அதிக சமூக தனிமைப் படுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆன்லைனில் நேரம் செலவிடும் போது, சக மனிதர்களுடன் செலவிடும் நேரமும், அவர்களுடனான நெருக்கமும் குறைகிறது. ஆகவே, தேவைக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதீர். உறவுகளோடு உறவாடுங்கள். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.


