News May 14, 2024

சபரிமலையில் 14ஆம் தேதி நடைதிறப்பு

image

வைகாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் மே 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதன்பின் மே 15 – 19 வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் மே 19ஆம் தேதி அரிவராசனம் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு நடை சாத்தப்படும். பக்தர்கள் வழக்கம் போல ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 22, 2025

BREAKING: இனி ₹2 லட்சம்.. தமிழக அரசு அறிவிப்பு

image

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விபத்து மரணத்திற்கான இழப்பீட்டை ₹1 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. விபத்தில் உடல் உறுப்பை இழந்தால் இனி ₹1 லட்சம்(முன்பு ₹20 ஆயிரம்) வழங்கப்படும். அதேபோல், இனி இயற்கை மரணத்திற்கு ₹30 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ₹10 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News August 22, 2025

மீண்டும் வருகிறது ‘டிக் டாக்’?

image

ஒருகாலத்தில் இந்தியர்களை பைத்தியமாக்கியது, டிக் டாக் செயலி. பாதுகாப்பு காரணங்களுக்காக 5 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு இதை தடைசெய்தது. இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் டிக் டாக் வரலாம் என தகவல் உலா வருகிறது. டிக் டாக் வெப்சைட் இந்தியாவில் இன்னும் ஆக்டிவாக இருப்பதாகவும், பலரால் அதை ஆக்சஸ் செய்ய முடிவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், டிக் டாக் செயலி அவைலபிளாக இல்லை. நீங்க டிக் டாக்கை வரவேற்பீர்களா?

News August 22, 2025

இரவில் பரோட்டா சாப்பிடுகிறவரா நீங்கள்?

image

இரவில் பரோட்டா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். பரோட்டா சாப்பிட்டால் ஜீரணமாக அதிகநேரம் பிடிக்கும். மேலும், இதற்காக அதிக தண்ணீரையும் வயிறு எடுத்துக்கொள்ளும். இதனால் உடலின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்படும். தவிர, இதன் சத்தை பிரித்தெடுக்கவும் குடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுமாம். இதனால் உடல் சோர்வடைந்து தூக்கம் பாதிக்குமாம். SHARE IT!

error: Content is protected !!