News April 1, 2025
நண்பனின் தாயுடன் தகாத உறவு.. இளைஞர் கொலை!

நண்பரின் தாயுடன் தகாத உறவிலிருந்த இளைஞரை, பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரின் சிதாமார்கியை சேர்ந்த ராஜாகுமார்(22). இவர், டெல்லியில் ஹோட்டலில் வேலை செய்தபோது தனது நண்பருடன் அடிக்கடி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தாயுடன் காதல் மலர்ந்துள்ளது. இதனை நேரில் பார்த்த அந்த பெண்ணின் கணவர், உறவினர்கள் ராஜாகுமாரை கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்தார்.
Similar News
News January 5, 2026
தவாகவில் இருந்து தவெகவுக்கு தாவுகிறார்!

தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து வெளியேறிய ஜெகதீச பாண்டியன் தவெகவில் இணையவுள்ளார். நாதகவில் இருந்து வெளியேறி தவாகவில் இணைந்த இவர், சீமானை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் தமிழ் தேசியம் பேசுவதால் சீமானை நண்பனாக கருதும் வேல்முருகனுக்கு இது பிடிக்காததால், விமர்சிக்க வேண்டாம் என ஜெகதீசனுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு அவர் உடன்பட மறுத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
News January 5, 2026
KKR-க்காக ₹4,000 கோடி செலவழிக்கும் ஷாருக்!

KKR அணியை கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றும் எண்ணத்தில், ஷாருக்கான் சுமார் ₹4,000 கோடி செலவழிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. KKR அணி உரிமத்தில் தற்போது, ஷாருக்கிடம் 55% பங்குகளும், மெஹ்தா குரூப்பிடம் 45% பங்குகளும் உள்ளன. மெஹ்தா குரூப்பிடம் இருந்து 35% பங்குகளை சுமார் ₹4,000 கோடியை கொடுத்து ஷாருக்கான் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அணியின் உரிமத்தில் அவரின் பங்குகள் 90% ஆக அதிகரிக்கும்.
News January 5, 2026
கருப்பையிலிருந்து 16 கிலோ ராட்சத கட்டி அகற்றம்!

டெல்லியைச் சேர்ந்த 30 வயது பெண்ணின் கருப்பையிலிருந்து 16 கிலோ எடையுள்ள ஒரு ராட்சத நார்த்திசுக் கட்டியை பரிதாபாத் தனியார் ஹாஸ்பிடல் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். பொதுவாக 1,000 பெண்களில் ஒருவருக்கு மட்டுமே 10 கிலோவுக்கு மேல் கட்டி வளரும் என்றும், பெண்கள் அவ்வபோது தங்களது உடலை பரிசோதனை செய்து கொள்வதோடு, நோயின் அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.


