News April 1, 2025
நண்பனின் தாயுடன் தகாத உறவு.. இளைஞர் கொலை!

நண்பரின் தாயுடன் தகாத உறவிலிருந்த இளைஞரை, பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரின் சிதாமார்கியை சேர்ந்த ராஜாகுமார்(22). இவர், டெல்லியில் ஹோட்டலில் வேலை செய்தபோது தனது நண்பருடன் அடிக்கடி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தாயுடன் காதல் மலர்ந்துள்ளது. இதனை நேரில் பார்த்த அந்த பெண்ணின் கணவர், உறவினர்கள் ராஜாகுமாரை கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்தார்.
Similar News
News November 25, 2025
இன்னும் ஒரு மணி நேரத்தில்.. ரெடியா இருங்க

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசன டிக்கெட் (₹300) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அறைகளுக்கான முன்பதிவு மாலை 3 மணிக்கு தொடங்கும். ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
ராஜன் போன்ற கேரக்டரில் நடிக்கவுள்ளாரா VJS?

அரசன் படத்திற்கு அதிபயங்கர எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குறிப்பாக யார் யார் இப்படத்தில் நடிக்கப் போகிறார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில், அவர்களின் பசிக்கு தீனி போடும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. ‘வடசென்னையின் ராஜன்’ போல இவரது கேரக்டரும் நின்றுபேசும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
News November 25, 2025
வங்கக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள்!

குமரிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானதாக IMD தெரிவித்துள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், தெற்கு வங்கக்கடலில் நாளை ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ளது. ஒரே நேரத்தில் 2 புயல்களால் கனமழை வெளுக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.


