News May 7, 2025
தகாத உறவு.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை!

திருச்சியில் திருமணமான ஒரு பெண்ணுடன் நாசர் அலி (30) என்பவர் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் 5 வயது மகனை நாசர் அலியும், அவரது நண்பர் வேலுமணியும் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து திருவெறும்பூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
Similar News
News January 9, 2026
மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார் CM: அன்புமணி

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 80% நிறைவேற்றியுள்ளதாக CM ஸ்டாலின் கூறுவது முற்றிலும் பொய் என அன்புமணி விமர்சித்துள்ளார். கல்விக்கடன் ரத்து, சமையல் எரிவாயு மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அப்படி இருக்கையில், ஒரு மாநிலத்தின் CM-ஆக இருப்பவர் மீண்டும் மீண்டும் பொய்களை கூறுவது, அவரது பதவிக்கு அழகல்ல என சாடியுள்ளார்.
News January 9, 2026
பொங்கல்.. ஆம்னி பஸ் டிக்கெட் விலை ₹4,000 வரை உயர்வு

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சாதாரண நாள்களில் சென்னை – நெல்லை செல்ல ₹1,800 வரை டிக்கெட் விலை இருக்கும் நிலையில், பொங்கல் பண்டிகை நாள்களில் ₹4,000 வரை உயர்ந்துள்ளது. சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் டபுள் மடங்காக உயர்ந்துள்ளது. நீங்க டிக்கெட் போட்டாச்சா?
News January 9, 2026
78 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு விநியோகம்: தமிழக அரசு

தமிழ்நாட்டில் இதுவரை 78,30,523 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு, ரொக்கப்பணம் ₹3,000 வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும், நேற்றும், இன்றும் பொங்கல் பணத்தை வாங்க முடியாதவர்கள், ரேஷன் கடை ஊழியர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


