News April 1, 2025
வெயில் காலத்தில்… இதை ஃபாலோ பண்ணுங்க!

*காலையில் எழுந்ததும் சிறிதளவு இளநீரை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பொலிவாகும். *வெயில் காலத்தில் முகத்தை அதிக முறைகள் சோப்பு போட்டு கழுவக்கூடாது. *லிப்ஸ்டிக், ஐ ஷேடோ போன்றவை வெளிர் நிறங்களில் இருப்பது மிக நல்லதாகும். *வெள்ளரிச்சாறுடன் சிறிதளவு பால் கலந்து முகத்தில் தேய்த்து ஊறிய பின் கழுவி வர முகச்சுருக்கம் நீங்கும் *அடிக்கடி பழச்சாறு அருந்தலாம்.
Similar News
News April 3, 2025
சொந்த மண்ணில் இந்திய அணி எதிர்கொள்ள உள்ள அணிகள்

நடப்பு ஆண்டில் இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணியுடன் 2 டெஸ்ட், 3 ODI, 5 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி நவ.14ஆம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நவ.30ஆம் தேதி தொடங்குகிறது.
News April 3, 2025
அரசு பதவியில் இருந்து நீக்கப்படும் மஸ்க்?

எலான் மஸ்கிற்கு கொடுக்கப்பட்ட பணிகள் முடிந்ததும், அவர் சிறப்பு அரசு பணியில் (DOGE தலைவர்) இருந்து விடுவிக்கப்படுவார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தனது தொழிலில் கவனம் செலுத்தினாலும், அவர் தொடர்ந்து டிரம்பின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக செயல்படவே வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
News April 3, 2025
வக்ஃப் சட்ட (திருத்த) மசோதா: பாஜக செய்யும் மாற்றம் என்ன?

வக்ஃப் சட்ட திருத்தத்தின்படி, வக்ஃப் வாரியம் தன் சொத்துகளை மாவட்ட கலெக்டர்களிடம் பதிவு செய்யவேண்டும். இதனால் சரியான மதிப்பீட்டை செய்யமுடியும். தற்போது வக்ஃப் உறுப்பினர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இனி அனைத்து உறுப்பினர்களும் அரசால் பரிந்துரைக்கப்படுவர். தலைமை செயல் அலுவலர் (mutawallis), 6 மாதங்களுக்குள் சொத்து விவரங்களை பதிவேற்ற வேண்டும். அரசு தணிக்கை செய்யும்.