News March 29, 2024
தமிழ்நாட்டில் வெயில் 40 டிகிரியை தொட்டது

ஈரோட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியாக பதிவாகி மக்களை தவிக்கவிட்டது. கரூர் பரமத்தியில் 39.2 டிகிரி, தர்மபுரியில் 39 டிகிரி, சேலத்தில் 38.8 டிகிரி, திருத்தணியில் 38.3, மதுரையில் 38.2 என்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரியாக பதிவானது. மார்ச் மாதம் முடியும் முன்பே வெப்பநிலை 40 டிகிரியை தொட்டிருப்பது மக்களை கவலையடையச் செய்துள்ளது.
Similar News
News April 3, 2026
ஓட்டுக்கு பணம் வாங்குவது ஜனநாயக துரோகம்: சீமான்

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வருவதில்லை, கோடிகளை சம்பாதிக்கவே வருவதாக சீமான் கூறியுள்ளார். குன்னூரில் பிரசாரம் செய்த சீமான், பணத்திற்காக நீங்கள் ஓட்டை விற்றால், அது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் தேசத் துரோகம் என்றும் தெரிவித்தார். மேலும், இலவசங்களை நம்பி ஏமாந்து வாக்களிக்காதீர்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
மனித உருவத்தில் அமர்ந்தபடி காட்சி தரும் சிவன் கோயில்!

பொதுவாக சிவன் என்றாலே லிங்கமும், நடராஜர் உருவம்தான் நினைவுக்கு வரும். ஆனால், மனித ரூபத்தில், அதுவும் அமர்ந்த நிலையில், சிவன் அருள்பாலிக்கும் கோயில் ஆந்திராவில் உள்ளது தெரியுமா? அனந்தபூர் மாவட்டத்திலுள்ள ஹேமாவதி திருக்கோயிலில் சிவன் சித்தாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இக்கோயிலின் பெயரே ஊருக்கும் அமைந்துவிட்டது. சிவராத்திரியின் போது இங்கு 8 நாள்கள் விஷேச பூஜைகளும் நடைபெறுகிறது.
News April 3, 2026
CM ஆக EPS-ன் முதல் கையெழுத்து: SP வேலுமணி

மக்களின் கஷ்டங்களை அறிந்தே அனைத்து குடும்பத்திற்கும் ₹10,000 வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்திருப்பதாக SP வேலுமணி தெரிவித்துள்ளார். தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைத்தால் முதல்வராக பொறுப்பேற்கும் EPS, அனைத்து குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் தலா ₹10,000 என்ற கோப்பில் தான் முதலில் கையெழுத்திடுவார் என அவர் கூறியுள்ளார். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


