News April 15, 2025
வருங்கால கணவர் கண்முன்னே…நேர்ந்த கொடூரம்!

வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, உ.பி.யில் இளம்பெண்னை (17) ஒருவரை அவரது வருங்கால கணவரின் கண்முன்னே 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை POCSO-வில் 8 பேர் கைதாகி இருக்கின்றனர். அவர்களில் கைதான, அகிலேஷ் பிரதாப் சிங் லோக்கல் BJP காஸ்கஞ்ச் பகுதியின் MLA-வுடன் நெருக்கமாக இருப்பவர் எனக் கூறப்படுகிறது.
Similar News
News April 17, 2025
உங்க பெயரில் போலி சிம் இருக்குதான்னு தெரியணுமா?

◆ https://sancharsaathi.gov.in/ பக்கத்துக்குச் செல்லவும் ◆‘Useful Links’ஐ கிளிக் செய்து, அதில், ‘Know Mobile Connections in Your Name’ஐ கிளிக் செய்யவும் ◆ உங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவிட்டு, ‘Captcha’வை பதிவிடவும் ◆போனுக்கு வரும் OTP-யை கொடுத்தால், உங்கள் பெயரில் இருக்கும் மொபைல் எண்கள் காட்டும் *அதில் செக் பண்ணி, எந்த நம்பர் உங்களுடையது இல்லையோ அதை புகார் செய்யலாம்.
News April 17, 2025
45 நாள்கள் விடுமுறை.. பள்ளி மாணவர்கள் குஷி!

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வுகள் நிறைவடைந்தது. 45 நாள்கள் கோடை விடுமுறை தொடங்கியதால் மாணவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இறுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கும் வரும் 23-ம் தேதியோடு தேர்வுகள் முடிவடைவதால் பின்னர் விடுமுறையாகும்.
News April 17, 2025
கருணாநிதி சமாதியில் கோவில் கோபுரம்… வெடித்த சர்ச்சை

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முன் அமைச்சர் சேகர்பாபு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அங்கு கோயில் கோபுரம் போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். காலம்காலமாக இந்துக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாக திமுவினர் கொண்டுள்ளதாக சாடினார். அதிமுக தரப்பிலும் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.