News March 29, 2024
2026இல் பாமக என்ற கட்சி இல்லாத நிலை உருவாகும்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 110 தொகுதிகளில் பாமக என்ற கட்சியே கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் விமர்சித்துள்ளார். மேட்டூரில் பேசிய அவர், “மேட்டூர், பென்னாகரம், தருமபுரி தொகுதியில் பாமக வென்றதற்கு அதிமுக தான் காரணம். தற்போது, அவர்கள் நம்மிடம் இருந்து ஓடி விட்டார்கள். அதுவும் நல்லது தான். 2026இல் பாமக என்ற கட்சி இல்லாத நிலை உருவாகும். அக்கட்சி காணாமல் போகும்” என்றார்.
Similar News
News October 31, 2025
நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. இங்கு NO விடுமுறை

மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-ம் ஆண்டு சதய விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், அக்.22-ம் தேதி கனமழையால் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News October 31, 2025
காய்ச்சலை விரட்டும் கறிவேப்பிலை கசாயம்!

எந்த காய்ச்சலையும் விரட்ட கறிவேப்பிலை கசாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱தேவை: கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பனங்கற்கண்டு அல்லது தேன் ✱செய்முறை: இவை அனைத்தையும் நன்கு இடித்து, நீரில் கொதிக்க வைக்கவும். 3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால், கறிவேப்பிலை கசாயம் ரெடி. இதனை காலை, மாலை என இரு வேலை பருகலாம். SHARE IT.
News October 31, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதை நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பை நடத்தி, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


