News March 31, 2025
அமைதிக்கான நோபல் பரிசு ரேஸில் இம்ரான் கான்…!

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைதிக்கான நோபல் பரிசுக்கு அந்நாட்டின் Ex PM இம்ரான் கானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நார்வேயில் உள்ள பார்டியட் சென்ட்ரம் என்ற கட்சியுடன் தொடர்புடைய பாகிஸ்தான் உலக கூட்டணியின் உறுப்பினர்கள் அவரது பெயரை பரிந்துரைத்துள்ளனர். தற்போது சிறையில் இருக்கும் இம்ரான் கான், 2019-லும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
Similar News
News April 2, 2025
தமிழக மீனவர்களை மத்திய அரசு மறந்து விடுகிறது: CM

கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய <<15965956>>CM ஸ்டாலின்<<>>, இலங்கை அரசுடனான ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி மீனவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதாகவும், தமிழக மீனவர்களை மத்திய அரசு மறந்துவிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
News April 2, 2025
4 மாவட்டங்களுக்கு விடுமுறை

காசிவிசுவநாத சாமி கோயில் குடமுழுக்கு, பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு ஏப்.7, 11ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சனி, ஞாயிறு, திங்கள்கிழமை (ஏப்.5,6,7) என தொடர்ந்து 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வருகிறது. ஏற்கெனவே, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏப்.7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2025
கச்சத்தீவை மீட்க தனித் தீர்மானம் கொண்டுவந்தார் CM

கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். தீர்மானத்தை முன்மொழிந்து அவையில் பேசிய அவர், இலங்கை அரசிடம் தவிக்கும் மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் இந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.