News March 17, 2024
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை விதிப்பு

ராமேஸ்வரத்தில் இருந்து 484 விசைப்படகுகள் நேற்று (மார்ச் 16) காலை மீன் பிடிக்கச் சென்றன. இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து காரைநகர் கொண்டு சென்றனர். இவர்களுக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
இராம்நாடு: 10 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

வங்கக்கடலில் உருவாகியிருந்த குறைவான காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்து வந்த நிலையில் காற்றின் வேகம் அதிகமாக திறந்த நிலையில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு மறுக்கப்பட்டது. அடுத்து 10 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் உற்சாகத்துடன் மீன் பிடித்து சென்றனர்.
News November 22, 2025
ராமநாதபுரம் வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

ராமநாதபுரம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே<
News November 22, 2025
ராமநாதபுரம்: கடன் வேண்டுமா..இங்க போங்க

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில், பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகள் இணைந்து 2025-26 ஆண்டு உயர் கல்வி சேர்க்கைக்கான கடன் மேளா நவ-28 அன்று நடைபெறுகிறது. உயர்கல்விக்கான சேர்க்கை பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். மாணவர்-பெற்றோரின் ஆதார், பான் கார்டு, 10,12 மதிப்பெண் சான்றிதழ்கள், புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் போன்ற இதர ஆவணங்களுடன் பங்கேற்கவும்.


