News March 17, 2024
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை விதிப்பு

ராமேஸ்வரத்தில் இருந்து 484 விசைப்படகுகள் நேற்று (மார்ச் 16) காலை மீன் பிடிக்கச் சென்றன. இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து காரைநகர் கொண்டு சென்றனர். இவர்களுக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
ராமநாதபுரம்; டெட் தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு!

இராமநாதபுரம் அருகே உள்ள முகமது சதக் கல்லூரியில் இன்று (15.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் டெட் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
News November 16, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (நவ.15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 15, 2025
குடும்ப ஓய்வூதியம் பெறும் மு.படைவீரர்களுக்கு சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், ஓய்வூதியம் (ம) குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படை வீரர்கள் (ம) விதவையர்கள் SPARSH PPO மற்றும் SPARSH updati
on SPARSH குறை பாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள CDA சென்னை மூலம் SPARSH OUTREACH PROGRAMME (நவ.18) கேணிக்கரை தனியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


