News March 17, 2024

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை விதிப்பு

image

ராமேஸ்வரத்தில் இருந்து 484 விசைப்படகுகள் நேற்று (மார்ச் 16) காலை மீன் பிடிக்கச் சென்றன. இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து காரைநகர் கொண்டு சென்றனர். இவர்களுக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (டிச.15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News December 15, 2025

காவலர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய எஸ்பி

image

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்ற 4 காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் என மொத்தம் 5 பேரின் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூ.4.06 இலட்சத்தை இன்று (டிச.15) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் வழங்கினார்.

News December 15, 2025

பரமக்குடியில் காணாமல் போன சிறுவர்கள் மீட்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆத்துப்பாலம் பகுதியில் வசிக்கும் 13 வயது ஹர்ஷித் மற்றும் கீர்த்திஷ் ஆகிய இரு மாணவர்கள் நேற்று பள்ளி முடிந்து டியூஷன் சென்றனர். அதனையொட்டி இரவு இருவரையும் காணவில்லை. ஆகையால் பெற்றோர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் பரமக்குடி காவல் துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு இன்று காணாமல் போன மாணவர்களை மீட்டனர்.

error: Content is protected !!