News March 17, 2024

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை விதிப்பு

image

ராமேஸ்வரத்தில் இருந்து 484 விசைப்படகுகள் நேற்று (மார்ச் 16) காலை மீன் பிடிக்கச் சென்றன. இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து காரைநகர் கொண்டு சென்றனர். இவர்களுக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 16, 2025

ராமநாதபுரத்தில் கட்டணமில்லா இலவச காவலர் பயிற்சி வகுப்பு

image

தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சமீபத்தில் 3665 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இந்த பயிற்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக இலவச கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (செப்.16)தேதி இன்று துவங்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 16, 2025

ராமநாதபுரம் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் அதிகாரிகள்

image

இன்று (செப்டம்பர்.15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

News September 16, 2025

30 அரசு பள்ளிகளுக்கு மென் திறன் டிவி வழங்கல்

image

மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் தனியார் அறக்கட்டளை மூலம் கல்வி 40 தீர்வு செயல்பட உள்ளது. இதன் தொடக்க விழா ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் தெரிவு செய்யப்பட்ட மண்டபம் வட்டாரம் சின்னப் பாலம் நடுநிலைப் பள்ளி உள்பட 30 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு மென்திறன் டிவி வழங்கப்பட்டது. இதன் மூலம் 3, 4, 5 வகுப்புகளுக்கு ஆங்கிலம் பேச்சுப்பயிற்சி விரைவில் கற்றுத்தரப்பட உள்ளது.

error: Content is protected !!