News October 21, 2025
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், குமரி, நாகை, ராமநாதபுரம், கடலூர் மாவட்ட மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீன் பிடிக்க சென்றவர்களும் விரைவில் கரை திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மீன்வளத் துறையினர், போலீஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் செய்கின்றனர்.
Similar News
News October 21, 2025
தொழுகை செய்த இடத்தை சாணத்தால் சுத்தம் செய்த BJP

புனேவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க Shaniwar Wada கோட்டை, மராத்திய கூட்டமைப்பின் தலைமையகமாக செயல்பட்டது. இந்நிலையில், இங்கு இஸ்லாமியர்கள் சிலர் தொழுகையில் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜ்யசபா MP மேதா குல்கர்னி தலைமையிலான பாஜகவினர், புனிதத்தன்மையை மீட்கும் நோக்கில் தொழுகை செய்த இடத்தை பசு சிறுநீர் (கோமியம்) & சாணத்தை கொண்டு சுத்தம் செய்தனர்.
News October 21, 2025
BREAKING: கூட்டணிக்கு வர விஜய்க்கு அழைப்பு விடுத்தார்

DMK மீண்டும் ஆட்சிக்கு வந்தால் TVK-வை ஆண்டவன் நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது என RB உதயகுமார் கூறியுள்ளார். ராட்சத பலம் கொண்ட DMK-வை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும் எனவும் வெளிப்படையாக விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், AP-ல் நடிகர் பவன் கல்யாண், சரியான முடிவு எடுத்ததால்தான் துணை முதல்வராக இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக, TVK-வை NDA-வில் இணைக்க <<18061640>>பேச்சுவார்த்தை<<>> நடப்பதாக தகவல் வெளியானது.
News October 21, 2025
ராமர் நீதியை போதிக்கிறார்: PM மோடி

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியா அநீதிக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டியது என PM மோடி தெரிவித்துள்ளார். கடவுள் ராமர் நீதியை போதிப்பதாகவும், அநீதியை எதிர்த்து போராட தைரியம் அளிக்கிறார் என்றும் நாட்டு மக்களுக்கு மோடி கடிதம் எழுதியுள்ளார். நக்சல்கள் ஒழிக்கப்பட்ட பல மாவட்டங்களில் முதல்முறையாக விளக்குகள் ஏற்றப்படுவதால், இந்த தீபாவளி சிறப்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.