News April 24, 2025
மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அப்டேட்

அரசுப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுபவர்கள் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் பெற்றாலும், அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எச்ஐவி, பார்கின்சன், தொழுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அரசு துறைகளின் உதவித் தொகை பெற்றாலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 25, 2025
போப் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர்

போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. உடல்நலக் குறைவால் காலமான போப் பிரான்சிஸ் உடல் நாளை (ஏப்.26) இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதில், பங்கேற்க வாடிகன் நகருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று செல்லவுள்ளார் என வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 317 ▶குறள்: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. ▶பொருள்: எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
News April 25, 2025
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..!

பேஸ்பால் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேநேரத்தில், இந்திய மகளிர் பேஸ்பால் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.