News May 16, 2024
செந்தில் பாலாஜி வழக்கில் இன்று முக்கிய உத்தரவு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி ஜாமின் கேட்கிறார். இதற்கு, அவர் இன்னும் எம்எல்ஏவாக தொடர்வதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக ED கூறுகிறது. இந்நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News August 13, 2025
அபிமன்யுவிற்கு சான்ஸ் கொடுக்க வேண்டும்: கங்குலி

அபிமன்யு ஈஸ்வரனுக்கு டெஸ்ட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என கங்குலி வலியுறுத்தியுள்ளார். அணியில் 3-வது இடத்தில் களமிறங்க அவர் பொருத்தமானவர் எனவும் தெரிவித்துள்ளார். அபிமன்யு கடந்த 4 ஆண்டுகளாக அணியில் இடம்பெற்றாலும், பிளேயிங் 11-ல் இடம்பெறவில்லை. முன்னதாக, தனது மகனுக்கு பின்பாக அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் டெஸ்ட்டில் அறிமுகமாகிவிட்டதாக அவரது தந்தை ரங்கநாதன் வருத்தம் தெரிவித்திருந்தார்.
News August 13, 2025
பாஜகவில் தொடங்கி திமுக வரை… மைத்ரேயனின் பயணம்

<<17389413>>திமுகவில் இணைந்துள்ள மைத்ரேயன்<<>> 1999-ம் ஆண்டு பாஜகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்தார். 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மைலாப்பூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2002, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானார். சிறிது காலம் OPS-வுடன் பயணித்த மைத்ரேயன் பிறகு பாஜகவில் இணைந்தார். தொடந்து EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் நுழைந்தார்.
News August 13, 2025
திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

அதிமுக முன்னாள் MP மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, புதுக்கோட்டை அதிமுக EX MLA கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அந்த வரிசையில் தற்போது மைத்ரேயனும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.