News April 20, 2025

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். தற்போது, இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் செயல்பாடுகள் (அ) கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இலக்கியம், நாவல், கவிதை, தொழில்முறை உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட அனுமதி பெற வேண்டியதில்லை. அதேநேரம், தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிட வேண்டும்.

Similar News

News November 27, 2025

டெஸ்லாவின் முதல் முழுநேர சேவை மையம் தொடக்கம்

image

டெஸ்லா கார் நிறுவனம், இந்தியாவில் முதல் முழுநேர விற்பனை மையத்தை ஹரியானாவில் தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் கஸ்டமர்கள் ஆலோசனைகள், புக்கிங், டெஸ்ட் டிரைவ் சேவைகளை பெறலாம். முன்னதாக, மும்பை மற்றும் டெல்லியில் அமைக்கப்பட்ட மையங்கள் காட்சிப்படுத்துதல் மையங்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. டெஸ்லா நிறுவனம் தனது 2 ‘Y’ வேரியண்ட் மாடல்களை மட்டுமே இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

News November 27, 2025

57 வயதில் இரட்டை குட்டி போட்ட அனார்கலி

image

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நடந்த ஒரு அரிய நிகழ்வு கவனத்தை ஈர்த்து வருகிறது. 57 வயதான அனார்கலி என்ற யானை, இரட்டை பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. 2 குட்டிகளும், 3 மணிநேர இடைவெளியில் பிறந்துள்ளன. மேலே, இரட்டை குட்டிகளுடன் அனார்கலி இருக்கும் போட்டோக்களை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 27, 2025

‘அஞ்சான் 2’ சம்பவம் இருக்கு.. லிங்குசாமி கொடுத்த அப்டேட்

image

சூர்யாவின் ‘அஞ்சான்’ நவ.28ம் தேதி ரீ-ரிலீசாகும் நிலையில், இயக்குநர் லிங்குசாமி ‘அஞ்சான் 2’ அப்டேட் கொடுத்துள்ளார். படத்தில் இருந்த தவறுகளை சரிசெய்தே Re-edited வெர்ஷனை ரிலீஸ் செய்வதாக அவர் கூறியுள்ளார். சூரியின் அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ரீ-ரிலீசிற்கு வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் சூர்யாவிடம் பேசி ‘அஞ்சான் 2’ பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!