News April 20, 2025
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். தற்போது, இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் செயல்பாடுகள் (அ) கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இலக்கியம், நாவல், கவிதை, தொழில்முறை உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட அனுமதி பெற வேண்டியதில்லை. அதேநேரம், தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிட வேண்டும்.
Similar News
News December 26, 2025
அறிவியலையே அதிரவைத்த ‘டார்க் ஆக்சிஜன்’

செடி, கொடிகள் சூரிய ஒளியை வைத்தே ஆக்சிஜனை உருவாக்கும். ஆனால், சூரிய ஒளியே செல்லாத பசிபிக் கடலின் 13,000 அடி ஆழத்தில் ஆக்சிஜன் உருவாவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Polymetallic nodules என்ற பாறையில் இருக்கும் மின்சாரம் (0.95 வோல்ட்), கடல் நீரில் இருந்து ஆக்சிஜனை பிரித்து வெளியிடுகிறது. ‘டார்க் ஆக்சிஜன்’ எனப்படும் இது, பூமியில் உயிர் உருவானது குறித்த ஆய்வையே மாற்றியமைத்துள்ளது.
News December 26, 2025
4 சுவருக்குள் எதுவும் நடக்கும்: ஜெயக்குமார்

OPS-ஐ கூட்டணியில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில், OPS-ஐ சேர்க்க இப்போது ஒருவாய்ப்பு உள்ளது போல் தெரிகிறதே என செய்தியாளர் கேட்க, அதற்கு ‘அரசியலில் ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? 4 சுவருக்குள் 4 விஷயம் நடக்கும். நேரம் வரும்போது தேவையானவற்றை கூறுவோம்’ என்று குறிப்பிட்டார்.
News December 26, 2025
₹1000 கோடி வசூலித்து ‘துரந்தர்’ சாதனை

ஹிந்தி திரையுலக வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படங்களில் 2-வது இடத்தை பிடித்துள்ளது துரந்தர். இந்த படம் இதுவரை ₹1006.7 கோடி வசூலித்து, இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதன் 2-ம் பாகம் 2026, மார்ச் 19-ல் வெளியாகவுள்ளது.


