News April 20, 2025

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். தற்போது, இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் செயல்பாடுகள் (அ) கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இலக்கியம், நாவல், கவிதை, தொழில்முறை உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட அனுமதி பெற வேண்டியதில்லை. அதேநேரம், தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிட வேண்டும்.

Similar News

News December 31, 2025

பொங்கல் கரும்பை நேரடியாக கொள்முதல் செய்க: அன்புமணி

image

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தோ, அதில் கரும்பு இடம்பெறுமா என்பது குறித்தோ இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை என அன்புமணி விமர்சித்துள்ளார். பன்னீர் கரும்பை கொள்முதல் செய்வதில் உள்ள குளறுபடிகளால், விவசாயிகளின் வலி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்வதோடு, தொகுப்பில் வழங்கும் கரும்புகளின் எண்ணிக்கையை 2-ஆக அதிகரிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 31, 2025

தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்

image

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் தீர்ப்பை ஏற்காதது முட்டாள்தனம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி, சிவன், மீனாட்சி, திருக்குறளை எப்படி சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாதோ, தீபம் ஏற்றுவதையும் தடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். மேலும், தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் காட்டாமாக குறிப்பிட்டுள்ளார்.

News December 31, 2025

திமுக கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

image

காங்., உள்கட்சி விவகாரத்தில் விசிக, CPI, மதிமுக தலையிட வேண்டாம் என MP மாணிக்கம் தாகூர் எச்சரித்துள்ளார். பிரவீன் <<18704694>>TN-ஐ உபி உடன்<<>> ஒப்பிட்டதால் திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில், ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி விஷயங்களை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தானது என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். மேலும், BJP–RSS-க்கு எதிரான கூட்டு வலிமையை இது பலவீனப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!