News April 20, 2025
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். தற்போது, இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் செயல்பாடுகள் (அ) கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இலக்கியம், நாவல், கவிதை, தொழில்முறை உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட அனுமதி பெற வேண்டியதில்லை. அதேநேரம், தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிட வேண்டும்.
Similar News
News December 16, 2025
100 நாள் வேலைத்திட்ட மாற்றம்: திமுக நோட்டீஸ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, VB-G Ram G திட்டத்துக்கான மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் திமுக MP டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். முன்னதாக, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு சின்னாபின்னமாக்குவதாக <<18573575>>CM ஸ்டாலின்<<>> விமர்சித்திருந்தார்.
News December 16, 2025
இன்று முதல் திருச்சி-சென்னை AIRBUS சேவை

இன்று முதல் டிச.31 வரை திருச்சி-சென்னை இடையிலான ATR விமான சேவைகளை Indigo ரத்து செய்துள்ளது. 76 இருக்கை வசதி கொண்ட ATR விமான சேவைக்கு பதில், காலை 10:35, மாலை 5:55 என 2 நேரங்களில் AIRBUS இயக்கப்படவுள்ளது. இந்த AIRBUS-ல் அதிகபட்சமாக 180 பேர் பயணிக்க முடியும். கிறிஸ்துமஸ், New Year பண்டிகை கால விடுமுறையை கணக்கிட்டு, பயணிகளின் தேவைக்கு ஏற்ப இந்த தற்காலிக மாற்றத்தை செய்துள்ளதாக Indigo கூறியுள்ளது.
News December 16, 2025
டிச.27-ல் நாதக பொதுக்குழு கூட்டம்

பரபரப்பான தமிழக அரசியல் களத்தில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு என இயங்கி வருகின்றன. ஆனால், ஒரு படி மேலாக சென்ற சீமான், 100 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டிருந்தார். இந்நிலையில், டிச.27-ல் சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் அரங்கில் நாதக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.


