News March 16, 2024

ஓபிஎஸ் அணியினர் முக்கிய ஆலோசனை!

image

மதுரை எழுமலையில் இன்று (16.03.2024) ஓபிஎஸ் அணி சார்பில் பாரளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை மற்றும் வாக்குசாவடி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேடபட்டி ஒன்றிய கழகம் மற்றும் ஏழுமலை பேரூர் கழகம் சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை வகித்தார். முக்கிய நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் தேர்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

Similar News

News December 6, 2025

மதுரை இளைஞர் ஏடிஎம்மில் நூதன திருட்டு

image

திருப்­புவ­னத்தை சேர்ந்­த­ மஞ்சுளா (53) மாட்டுத்­தா­வணியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்­க சென்­ற போது அவருக்கு உதவி செய்வது போல் வாலிபர் ஒருவர் நடித்துள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்­த­ போது அவரின் செல்­போனில் ரூ 28,500 பணம் எடுத்­த­தாக மெசேஜ் வந்தது. மாட்டுத்­தா­வணி போலீ­சார் சிசிடிவி பதி­வை ஆய்வு செய்­து வில்­லா­பு­ரம் சபரி கிருஷ்­ணனை(33) நேற்று கைது செய்து ரூ.8000த்தை பறிமுதல் செய்­த­னர்.

News December 5, 2025

மதுரை மாநகராட்சி ஊழியர் வலிப்பு ஏற்பட்டு பலி.!

image

மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பிளம்பராக இருந்தவர் ராஜா 50. மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் பகுதி கழிவு நீர் கால்வாய் அருகே அவர் நடந்து சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 5, 2025

மதுரை அருகே பெண் தற்கொலையில் சந்தேகம்…!

image

வெள்ளலூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி அன்னக்கிளி(35). முத்துக்குமார் துபாயில் வேலை பார்த்து வருவதால் தனது மகள் முத்துலட்சுமி(10), சிவா(7) மற்றும் மாமியாருடன் அன்னக்கிளி வாசித்து வந்தார். அவர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார், உயிரிழப்புகான காரணம் குறித்து இன்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!