News May 12, 2024
உலகின் முதல் பறக்கும் டாக்சி தயாரிக்கும் சென்னை ஐ.ஐ.டி.

சாலை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வளிக்கும் வகையில், உலகின் முதல் பறக்கும் எலக்ட்ரிக் டாக்சியை புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கின்ற சென்னை ஐ.ஐ.டி., வடிவமைத்து வருகிறது. மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த டாக்சி தரையிறங்கவும், பறக்கவும் 15 அடி நீளமும், அகலமும் கொண்ட இடம் போதுமானது. 2 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய வகையில் இந்த டாக்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News September 8, 2025
ஒளியிலே தெரிவது தேவதையா..

ஜில்லாவின் தங்கையாய், சுயம்பு லிங்கத்தின் மகளாய் வசீகரித்த நிவேதா தாமஸின் போட்டோஸ் படுவைரலாகி வருகிறது. கடைசியாக தமிழில் ரஜினியின் மகளாக ‘தர்பார்’ படத்தில் நடித்தவரை அடுத்து எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். அவரின் போட்டோஸை பார்த்த ரசிகர்கள், ‘அவள் ஓணம் சேலையில் அலங்கரித்த வேளை.. அவளின் அழகில் மயங்கி நேரமும் மறந்தது நாளை!’ என கவிதை பாடி வருகின்றனர்.
News September 8, 2025
சற்றுமுன்: வரலாறு காணாத விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தை போன்று வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து ₹140-க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாளில் மட்டும் வெள்ளி விலை ₹4 ஆயிரம் அதிகரித்துள்ளது.
News September 8, 2025
முடங்கியது TET சர்வர்.. ஆசிரியர்கள் தவிப்பு

2012-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயமாகியுள்ளது. தேர்வு எழுதுவோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பித்த நிலையில், trb.tn.gov.in இணையதள சர்வர் முடங்கியுள்ளது. இதனால், பலரும் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நவம்பரில் TET தேர்வு நடைபெறவுள்ளது.