News April 9, 2024
புதிய அறக்கட்டளையை தொடங்கிய சென்னை ஐஐடி

இந்தியாவில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்களை உலகளவில் கொண்டு சேர்க்க புதிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்த அறக்கட்டளையின் சி.இ.ஓ-வாக வணிக மேலாண்மை & தொழில்நுட்ப நிபுணர் திருமலை மாதவநாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளை இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் தொழில்நுட்பம் & நிதி போன்ற வணிக ரீதியிலான உதவிகளைப் பெற்று தரும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News January 16, 2026
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவின் கை ஓங்கியதா?

மும்பை, புனே உள்பட மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மும்பை மாநகராட்சியில் (BMC) பாஜக தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி 88 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. தாக்கரே சகோதரர்கள் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். மும்பை மட்டுமல்லாமல் மீதமுள்ள 28 மாநகராட்சிகளிலும், ‘மஹாயுதி’ கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.
News January 16, 2026
வெள்ளி விலை இன்று ₹4,000 குறைந்தது

தங்கம் விலை இன்று(ஜன.16) <<18869879>>சவரனுக்கு ₹480<<>> குறைந்தது போல், வெள்ளியும் கிலோவுக்கு ₹4,000 குறைந்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் 1 கிராம் வெள்ளி ₹306-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹3,06,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளதால், இந்திய சந்தையில் குறையத் தொடங்கியுள்ளது.
News January 16, 2026
அமைதிக்கான நோபல் பரிசு டிரம்ப்புக்கு சொந்தமானதா?

மரியா மச்சாடோ தனது <<18868940>>நோபல்<<>> பதக்கத்தை டிரம்ப்புக்கு பரிசாக வழங்கினார். சுதந்திர வெனிசுலாவை பாதுகாக்க டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளுக்காக இதை வழங்குவதாக மரியா கூறினார். இதற்கு டிரம்ப், ‘பரஸ்பர மரியாதையின் அடையாளம்’ என நன்றியும் தெரிவித்துள்ளார். அதேநேரம், நோபல் பரிசை மாற்றவோ, பகிரவோ முடியாது என்பதால், பதக்கம் டிரம்ப்பிடம் இருந்தாலும், கௌரவம் மரியாவுக்கே சொந்தம் என நோபல் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.


