News April 24, 2025
2 வாரம் இண்டெர்நெட் இல்லாமல் இருந்தால்…

இப்போது, பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்னையே எந்த ஒரு விஷயத்திலும் Focus பண்ண முடியாமல் தொடர்ந்து தடுமாறுவது தான். ஆனால், 2 வாரம் இண்டெர்நெட் பயன்படுத்தாமல் இருந்தால், உங்கள் மூளை 10 ஆண்டுக்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அதே புத்துணர்ச்சியுடன் செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். Texas யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். ட்ரை பண்ணி பாருங்க!
Similar News
News April 24, 2025
நடிகைகள் ரேப்: இயக்குநர் மீதான வழக்கு மறுவிசாரணை

ME TOO விவகாரம் எழுந்தபோது, ஹாலிவுட் இயக்குநர் ஹார்வி வெயின்ஸ்டன் மீது நடிகைகள் உள்ளிட்ட சுமார் 80 பேர் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட புகார்களைத் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான வழக்கில் 2020-ல் அவருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் மேலும் 2 பேர் தெரிவித்த புகார்கள் அடிப்படையில் வழக்கு மீது மறுவிசாரணை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹார்வி வெயின்ஸ்டன் வீல் சேரில் வந்து ஆஜரானார்.
News April 24, 2025
நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. பாக்.கிற்கு என்ன பாதிப்பு? (1/2)

நேரு-அயூப்கான் முன்னிலையில் உலக வங்கி மத்தியஸ்தத்துடன் 1960-ல் இந்தியா, பாக். இடையே சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கிழக்கு நதிகளான சட்லஸ், பீயாஸ், ராவி நதிநீர் அனைத்தும் இந்தியாவுக்கும், சிந்து, ஜீலம், செனாப் நதிநீர் பாகிஸ்தானிற்கும் என தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் 33 மில்லியன் ஏக்கர் இந்திய விவசாய நிலமும், 135 மில்லியன் ஏக்கர் பாகிஸ்தான் விவசாய நிலமும் பயனடையும்.
News April 24, 2025
நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. பாக்.கிற்கு என்ன பாதிப்பு? (2/2)

மேடான இந்திய பகுதிகளில் உருவாகி கீழ்நோக்கி வரும் இந்நதிகளின் நீரையே பாகிஸ்தான் விவசாயிகள் அதிகம் நம்பி உள்ளனர். பாகிஸ்தானில் குடிநீருக்கும் இந்நீரே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்நீரை இந்தியா வழங்கி வந்தது. தீவிரவாதத்தை தூண்டிவிடுவதை நிறுத்தாததால், தற்போது இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.