News January 21, 2025
செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபட்டால்….

செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடுவது பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடும் போது, செல்வம் பெருகி, செவ்வாய் தோஷம் பாதிப்பு குறையும் என்பது ஐதீகம். அதிகாலையில் நீராடி, முருக பெருமானை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும். மாலையில் விரதத்தை முடிக்கும் வரையில் பால், பழச்சாறு மட்டுமே அருந்தி கந்தசஷ்டி கவசத்தை உச்சரித்த படி விரதம் இருக்க வேண்டும்.
Similar News
News August 26, 2025
விஜய் VS விஷால்… யார் மாஸ்?

விஜய் அரசியல் வருகையால் 2026 தேர்தல் களம் அவ்வளவு எளிதாக இருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால், அவருக்கு எதிராக <<17519653>>விஷாலை <<>>களமிறக்க திமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளிவருகின்றன. உண்மையில விஷால் பிரபலம் தான், அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், விஜய்யை எதிர்த்து வெற்றிபெறும் அளவுக்கு விஷாலுக்கு மாஸ் இருக்கிறதா என்றால், அது கேள்வி குறிதான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
News August 26, 2025
இரட்டை வேடம் போடும் திமுக: அன்புமணி

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என TN அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி அறிக்கை வெளியிட்ட அன்புமணி, இத்திட்டத்துக்காக கிணறுகள் அமைக்க ONGC-க்கு அனுமதி அளித்தது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் என்றும், இந்த முடிவை அவர்கள் தன்னிச்சையாக எடுத்ததாக திமுக நாடகமாடுவதாகவும் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் சாடினார்.
News August 26, 2025
இன்றே இப்போதே கேட்டுவிடுங்கள்..

‘நாங்கல்லாம் அந்த காலத்துல’ எனச் சொல்லும் தலைமுறையிலும் சரி, இன்றைய நவீன வாழ்விலும் சரி, நாம் பரபரப்பாகவே இயங்கி வருகிறோம். இதனிடையே, நமக்கு பிடித்தவர்களிடம் கூட சில விஷயங்களை பேசவோ, கேட்கவோ மறந்திருப்போம் (அ) வேண்டுமென்றே தவிர்த்திருப்போம். இதற்கான விடைகளை தெரிந்துகொண்டால் சந்தேகம், பயம், வெறுப்பு போன்றவை அடுத்த நொடியே நீங்கும். இவ்வாறான கேள்விகள் உங்களுக்கு உள்ளதா, யாரிடம் கேட்கப் போகிறீர்கள்?