News April 29, 2025
9 செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபட்டால்….

9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை பெருக்கி, செவ்வாய் தோஷம் பாதிப்புகளை குறைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள்.
Similar News
News October 17, 2025
ம.பி.யில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. மருந்தில் நெளிந்த புழுக்கள்

ம.பி.,யில் இருமல் சிரப் குடித்த குழந்தைகள் உயிரிழந்த துயரம் அடங்குவதற்குள், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவாலியர் மாவட்ட அரசு ஹாஸ்பிடலில் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட ‘Azithromycin’ மருந்தில் புழுக்கள் நெளிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாயார் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த ஹாஸ்பிடலில் இருந்த அனைத்து Azithromycin மருந்துகளும் ஆய்வுகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.
News October 17, 2025
இந்த தீபாவளி இளம் ஹீரோக்களுக்கானது: சிம்பு

‘பைசன்’, ‘டியூட்’, ‘டீசல்’ படங்களை குறிப்பிட்டு, இந்த தீபாவளி இளம் ஹீரோக்களுக்கானது என சிம்பு தெரிவித்துள்ளார். 3 படங்களுமே கடின உழைப்பு, நம்பிக்கையால் உருவாக்கப்பட்டது எனவும், யாரையும் யாரோடும் ஒப்பிடாமல், அனைவரும் சேர்ந்து தியேட்டர்களில் படம் பார்த்து கொண்டாடுவோம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தீபாவளி நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
EWS இடஒதுக்கீட்டில் 70 சாதிகள்: வானதி சீனிவாசன்

கோவில்களில் குடமுழுக்கின் போது தமிழில் அர்ச்சனை செய்வது போல், சமஸ்கிருதத்திலும் செய்ய வேண்டும் என நேற்றைய சட்டசபையில் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்தான், சமஸ்கிருதம் வராது என சபாநாயகர் அப்பாவு கூறினார். மேலும், EWS இடஒதுக்கீட்டில் 70-க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதாகவும், தமிழகத்தில் அவர்களால் இடஒதுக்கீட்டை அணுகமுடியவில்லை என்றும் வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்தார்.