News April 29, 2025
9 செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபட்டால்….

9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை பெருக்கி, செவ்வாய் தோஷம் பாதிப்புகளை குறைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள்.
Similar News
News April 29, 2025
அண்ணாமலைக்கு ‘நோ’ எம்.பி. பதவி.. காரணம் இதுதான்!

TN பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு அதிகாரமிக்க பொறுப்பு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். <<16247938>>ஆந்திராவில் <<>>இருந்து ராஜ்ய சபா எம்.பி. ஆக்கப்பட்டு பின்னர் மத்திய அமைச்சரவையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அதற்கு காரணம் அண்ணாமலை தானாம். அவர் TN அரசியலில் தீவிரம் காட்ட விருப்பம் தெரிவித்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News April 29, 2025
சூர்யவன்ஷியின் ரோல்மாடல்: சச்சினா? காம்ப்ளியா?

14 வயதில் ஐபிஎல்-ல் சதமடித்தன் மூலம் ஒரே நாளில் உச்சத்துக்கு சென்றுவிட்டார் சூர்யவன்ஷி. ஹர்ஷா போக்ளே தொடங்கி உள்ளூர் ரசிகர்கள் வரை புகழ்ந்து வருகின்றனர். அதே நேரம், சிறுவயதில் கிடைக்கும் வெளிச்சத்தில், சூர்யவன்ஷி கவனம் இழந்துவிடக் கூடாது என்கின்றனர். சச்சின்-வினோத் காம்ப்ளி உதாரணத்தை சுட்டிக்காட்டி, சூர்யவன்ஷி சச்சின் வழியில் செல்ல வேண்டும்; காம்ப்ளி வழியில் அல்ல என்கின்றனர்.
News April 29, 2025
பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி!

மதுரை K.K.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி ஆருத்ரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 30 நிமிடங்கள் தண்ணீர் தொட்டியில் தத்தளித்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ICU-வில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளி இயங்கியது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.