News April 29, 2025

9 செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபட்டால்….

image

9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை பெருக்கி, செவ்வாய் தோஷம் பாதிப்புகளை குறைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள்.

Similar News

News November 17, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 17,கார்த்திகை 1 ▶கிழமை:திங்கள் ▶நல்ல நேரம்: 6.00 AM – 7.30 AM ▶ராகு காலம்: 7.30 AM – 9.00 AM ▶எமகண்டம்: 10.30 AM – 12.00 AM ▶குளிகை: 1.30 PM – 3.00 PM ▶திதி: திரையோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: பூரட்டாதி ▶சிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலையணிதல், சிவன் கோயிலில் சங்கு அபிஷேகம், ஸ்ரீ அன்னை நினைவு நாள்.

News November 17, 2025

சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

image

சத்தீஸ்கரின் கோல்மால் பாட் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போலீசாரும், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியபோது, நக்சல்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 9 நக்சல்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

News November 17, 2025

அதிமுகவினருக்கு கொள்கைகள் எதுவும் தெரியாது: உதயநிதி

image

நாட்டில் சில தலைவர்கள், தங்களது தொண்டர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டும் என விரும்பவில்லை என உதயநிதி தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு அதிமுக தொண்டர்களுக்கு கொள்கைகள் எதுவுமே தெரியாது எனவும், திமுகவை எதிர்ப்பதுதான் அவர்களின் ஒற்றை நோக்கம் என்றும் விமர்சித்துள்ளார். தனது தொண்டர்களுக்கு எதுவும் தெரியக்கூடாது என EPS விரும்புவதாகவும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!