News April 29, 2025
9 செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபட்டால்….

9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை பெருக்கி, செவ்வாய் தோஷம் பாதிப்புகளை குறைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள்.
Similar News
News December 8, 2025
தாய்லாந்து-கம்போடியா மோதல்: மீண்டும் போர் பதற்றம்!

கடந்த அக்டோபர் மாதம் தான், டிரம்ப் முன்னிலையில் <<17232581>>தாய்லாந்து-கம்போடியா<<>> போர் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், 2 மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், இன்று எல்லையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தங்கள் ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக கூறி, கம்போடியாவின் ராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதை கம்போடியா மறுத்துள்ள நிலையில், மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.
News December 8, 2025
விஜய் பரப்புரைக்கு TN-ல் இருந்து யாரும் வராதீங்க: TVK

புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு TN-ல் இருந்து யாரும் வர வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். உப்பளத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளன. இதனால், கடலூர், விழுப்புரத்திலிருந்து கூட்டம் வரும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News December 8, 2025
இரவில் பெண்கள் கூகுளில் அதிகம் பார்ப்பது இதுதான்

இன்றைய சூழலில், நாம் எந்த கேள்விக்கும் பதில் தேடி, முதலில் ஓடுவது கூகுளிடம் தான். முக்கியமாக, இரவு தூங்கும் முன் ஸ்மார்ட்போனில் எதையாவது தேடிப் பார்க்கும் பழக்கம் பெரும்பாலானோரிடம் அதிகரித்துள்ளது. வேலைப்பளு, வீட்டு வேலைகள் என நாள் முழுவதும் பரபரப்பாக இருக்கும் பெண்கள், இரவில் தூங்குவதற்கு முன் அதிகம் தேடும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா? எதிர்பாராத சுவாரஸ்யமான பதில்களை மேலே SWIPE பண்ணி பாருங்க.


