News September 4, 2025
தலையணையின் கீழ் இந்த 5 பொருள்களை வைத்தால்..

தூங்கும் போது தலையணையின் கீழ் இந்த 5 பொருள்களை வைத்திருந்தால் அதிர்ஷ்டமும், பாசிட்டிவ் எனர்ஜியும் தேடி வரும் என வாஸ்து நம்பிக்கை கூறுகிறது. 1) இரும்பு: பயத்தையும், கெட்ட கனவுகளையும் நெருங்க விடாது. 2) பூண்டு: நேர்மறை சிந்தனைகளை கொடுக்கும். 3) சதகுப்பி விதைகள்: ராகு தோஷத்தை போக்கும். 4) பச்சை ஏலக்காய்: ஆழ்ந்த உறக்கத்தை தரும். 5) கல் உப்புடன் ஒரு ரூபாய் நாணயம்: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Similar News
News September 7, 2025
BCCI பேங்க் பேலன்ஸ் இவ்வளவா?

BCCI வங்கிக் கணக்கில் ₹20,686 கோடி உள்ளதாக தகவல் வெளியாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019-ல் ₹6,059 கோடியாக இருந்த பேங்க் பேலன்ஸ், கிட்டத்தட்ட ₹14,000 கோடி உயர்ந்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியினரின் பங்கு அளப்பரியது என்று கூறப்படுகிறது. சர்வதேச தொடர்களை விட IPL சீசன்களில் BCCI அதிக கல்லா கட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணக்கார கிரிக்கெட் வாரியமாகவும் BCCI உள்ளது.
News September 7, 2025
ஞானவேல் இயக்கத்தில் மோகன்லால்?

நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ‘Dosa king’ படத்தின் கதையை மோகன்லாலிடம் சொல்லியுள்ளாராம் டி.ஜே.ஞானவேல். இது மோகன்லாலுக்கும் பிடித்துபோக, படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை வழக்கில் சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலுக்கு கிடைத்த ஆயுள் தண்டனையை வைத்தே இப்படம் உருவாகவுள்ளது. இறுதியாக ஞானவேல் இயக்கிய ‘வேட்டையன்’ படம் தோல்வியையேச் சந்தித்தது.
News September 7, 2025
கோயில் நிதியில் இதெல்லாம் செய்யக்கூடாது: HC

கோயில் உபரி நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் போன்றவற்றை கட்டக்கூடாது என மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணைகளையும் ரத்து செய்த HC, இந்த நிதியை கோயில் மேம்பாடு, பக்தர்கள் நலன் ஆகியவற்றிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் என்ன தவறு என்று SC கேள்வி எழுப்பியிருந்தது.